Tuesday, December 16, 2014

குழந்தைத் தொழிலாளர்

கற்பவை கற்கும் முன்,
நின்றோம் பள்ளியை விட்டு!
அற்பவை பணம் ஆயினும், 
சென்றோம் ஆலை தொட்டு!
சொற்பவை கூழ் ஆயினும்,
தின்றோம் பாடு பட்டு!
ஏற்பவை எம் விதி என்று,
சென்றோம் கண்ணீர் விட்டு!
வலை வீசி வறுமை,
வலு போட்டு இழுக்க,
கவலையிலே மாட்டின,
குட்டி மீனு நாங்க!
விலை பேசி நாங்கள்,
விற்று விட்ட கல்வி, இப்போ
தொலைதூரம் தாங்க!
தட்டாம் பூச்சி பிடித்து,
நிறம் மாறிய கைகள்,
உளியை பிடித்து இன்று ,
உள்ளங்கை சிவப்பானதே!
பட்டம் பறக்க விட்டு,
பார்த்து ரசித்த கண்கள்,
தீப்பொறி தீண்டி தீண்டி ,
தினம் சருகாய் போனதே!
சாலையின் புழுதியை,
சந்தனமாய் பூசினோம்!
சோலையின் முட்களுடனும்,
சந்தோஷமாய் பேசினோம்!
வேலை தேடி ஆலை சென்ற,
வேதனையாய் அந்த நொடி,
பாலைவனமாய் பாழானோம்!!
- Siva

ஹைக்கூ

மழலை பருவம் மடியோடு,
முதுமை பருவம் தடியோடு, 
இளமை பருவம் குடியோடு! 
இப்படிக்கு டாஸ்மாக்!!

-Siva

Monday, December 8, 2014

வெட்டியான் சொல்றேன்

பணம் பணம் என்றொரு பயணம்,
கனம் கனமா இங்கு போகிறதே!
மனம் மனம் அதை மதிக்காமல்
இனம் மனிதயினம் செல்கிறதே!
தினம் தினம் இந்த போதயில்,
ரனம் ரனம் சென்ற பாதையில்,
பிணம் பிணமாய் இங்கு குவிகிறதே !

அதிகாரம் எனும் ஆயுதத்தால்,
அனுதினமும் அடக்கி வைத்து ,
சதிகார ஆட்டம் ஒன்னு போட்டீங்க!
விதி வசம் மாட்டிகிட்டு,
சவ ஊர்வலம் ஏறுகிட்டு,
சத்தமின்றி உறங்கும்போது ,
ஆட்டம்போட்டு உங்களை
மண்ணுக்குள் அடக்கிவைப்பேங்க!

பதினாரும் பெற்று ,
பெருவாழ்வு வாழ்ந்தீங்க !
திதி நாளு முடிஞ்சபின்னே,
கதி யாரு உங்களுக்கு ?
நதியோடு சாம்பல் போனப்பின்னே,
நாங்க தானே காவலுக்கு!

வெட்டியான் சொல்றேன்
கெட்டியா கேளுங்க,
இறந்த தேதி ஒன்றென்றால்,
கல்லறையிலே உங்க பெயரிருக்கும் .
நீங்க இரந்த தேதி பலவென்றால் (தானம்)
வரலாற்றிலும்  உங்க வாழ்விருக்கும் !

-Siva

Tuesday, November 25, 2014

பேரம்

பல்பொருள் அங்காடியில்
ஊமையாய் இருந்த வாய்,
பல்லில்லா பாட்டியிடம்
உரக்க பேசியது ,
பேரம்!!!
-Siva

குடை

கருப்பின தீண்டாமை,
கடுகளவும் குறையவில்லை,
கண்ணீரோடு வாசலில்,
குடை!!
-Siva

தனியா வாழாத எறும்பு நாங்க

தனியா வாழாத எறும்பு நாங்க,
தெய்வங்களும் வாடகை கொடுத்து,
எங்க வீட்டில் வாழ விரும்புவாங்க!

அதிகாலை சூரியன் எங்கள் வாசலிலே,
குதிகாலை எடுத்து வைக்கும் ஆசையிலே,
கள்ளதனமாய் வருமே சன்னல் வழி!
தென்றலும் தன் கதைகள் எழுத,
கதவோரம் போடுமே பிள்ளையார் சுழி!

திருமணம் எங்களால் திருவிழாவாகும்,
தெருவெல்லாம் எங்களின் புகழ் பாடும்!
அம்மா சமையலை உச்சு கொட்டி,
உண்டு முடித்ததும் சப்பு கொட்டி ,
சுண்டுவிரலை சுவைப்போம் கண்மூடி !
அப்பா எங்களை வழிநடத்த ,
தப்பா கால்கள் சென்றதில்ல!
துயரம் என்றைக்கும் வென்றதில்ல!

பக்கத்தில் உறவுகள் பூத்திருக்க,
புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்ள,
பிள்ளகளுக்கு உறவுகள் புதிதல்ல !
ஏக்கத்தில் அன்பைத் தேடி என்றைக்கும்,
எம்இதையம் எதிர்வீடு சென்றதில்ல!
தேக்கத்தில் கண் அனை நிறைந்தால்,
திறந்துவிட வேறொருவரை தேடியதில்ல!

புரியா ஊடல்கள் வளைத்தெங்கள்,
பாசக்கிளை என்றும் முறியாது !
பிரியும் உயிர் பிரிந்தாலும், எங்கள்
பிரியம் என்றைக்கும் பிரியாது!
-Siva

குறள் வெண்பா -2

பழிக் கண்டழும் விழியழகு ஆற்றாமல்
வெகுண்டெழும் கை கழியழகு!
-Siva
Tried kural venba after long time. This means "tear coming from eyes after seeing injustice is beautiful but the hand raised against injustice is more beautiful "


மேகம்

நாம் சேர்ந்திருந்தோம் கண்ணீரோடு,
நாம் பிரிந்துசென்றோம் விடியலோடு,
இருவருள் இருந்தது மோகமில்லை,
மேகம்!!
-Siva

Tuesday, October 21, 2014

வலைத்தளத்தில் சிலந்தி

வலைத்தளத்தில் சிலந்திப் போல் 
வலை விரித்து காத்திருந்தாய்,
துள்ளி விழும் மீனாக ,
மாட்டிக்கொண்டேன் நானாக ! 
தப்பி ஓடும் மானாக, 
துரத்தி வந்தாய் ராமனாக!

ஏனோ தானோ என் தானீக்கெல்லாம்,(selfie)
எண்ணற்ற விரும்பிகள் கொடுத்தாய்! (likes)
என் முகநூலின் முகப்பினை, (wall)
முத்ததினால் நிரப்பினாய்! 
புள்ளி வைத்து என்நிலை எழுதினாலும், (status)
தன்நிலை மறந்து பகிர்ந்தாய்!

தூசி படும் என்று சொல்லி, 
துப்பட்டாவில் முகம் மூடி, 
ஊரு கண்ணு படமால், 
உன்னை பார்க்க ஓடி வந்தேன்!
நீ பேசி போன வார்த்தையை , 
ஒற்றை வரி கவிதை என்றே , 
உள்ளுக்குள் வாசித்து நின்றேன்!

உன் முகநூலை மட்டும் படித்து,
ஆனேன் பெண் பட்டதாரி,
உன் அகநூலின் முரண் அறிந்து, 
ஆனேனின்று புண் பட்டதாரி!
நகம் போலென்னை நறுக்கிய பின்னும், 
யுகம் யுகமாய் உன் நினைவுகள் , 
உலக யுத்தம் செய்கிறதே!
ஓர் அகதியை போல் என்னிதயம், 
உன் தேசம் வர துடிக்கிறதே!

மூடி வைத்து நெஞ்சில் மறைக்க 
தேடி வந்த காதல் இருக்கு, 
தாடி வைத்து சோகம் காட்ட, 
ஆண்கள் போல எனக்கென்ன இருக்கு?
வீணென்று நீ வீசிய பின்னும்,
ஊண் சுமக்கும் இந்த உடலின், 
உயிரென்றும் உன்னருகில் இருக்கு!
-Siva

வேடந்தாங்கல் பறவை

வேடந்தாங்கல் பறவைப் போல,
வேறு தேசம் விட்டு எனக்காக வந்தாய்!
வேகமாக போகும் என் புறவழி சாலையில்,
வேலிப்போடும் சுங்கமாக நின்றாய்!
மண் பதிந்த பேருந்து கண்ணாடியிலும் ,
உன் பெயரை என்னோடு எழுத வைத்தாய்!
பார்க்கும் இடத்தில் எல்லாம் தெரிந்து,
கடவுள் நீ என குழம்ப வைத்தாய்!
என்னுள் இருக்கும் காதலை,
எழுத்து கூட்டி படிக்க வைத்தாய்!
புரிந்து கொள்ள நினப்பதற்குள்,
எரியும் கொள்ளியில் என்னை ஊற்றினாய்!
வரப்போற பூக்கள் போல,
உன் காலுக்கடியில்
காதலும் இன்று நசுங்குதடி!
சிறப்பான நடிகை நீயென்று,
சில நொடிகளில் புரிந்ததடி!
கண்களை முந்திக்கொண்டு,
இதயம் கலங்கி நிற்குதடி!
ஆறுதல் சொல்ல ஆளைத்தேடி,
அடுத்தநொடி உன்னை தேடுதடி!
உன் தும்மல் காற்றோடு,
என்னையும் தூக்கி எறிந்தாய் ஏனடி!
காதலை கடவுள் என நம்பி,
கடைசியில் நாத்திகன் ஆனேனடி!!
-Siva

Saturday, September 6, 2014

காயிலாங்கடை வியாபாரி

சுற்றும் விளக்கை தலையில் சூடி,
குற்றுயிரை மடியில் சுமந்து ,
பிள்ளை போல் அலறிக் கொண்டு,
வெள்ளை தேவதை ஓடினாள் !

அருகே இருக்கும் ஆலயம் தேடி,
ஆண்டவனை பார்க்க காத்திருந்து ,
ஆறுதலின்றி வெளியே வாடினாள் !

காணிக்கை செலுத்த வழியில்லாமல்,
கண்ணீர் தவிர மொழியில்லாமல்,
காலனின் கைகளில் உயிரை விற்று,
காயத்தை மட்டும் நெஞ்சில் சுமந்து ,
கதறியழுது வீடு திரும்பினாள்!

அவள் கடவுளாய் பார்த்தவன் கடவுளில்லை ,
கைக்கொரு விலை, காலுக்கொரு விலைபேசும்
காயிலாங்கடை வியாபாரி!
அவள் கூட்டி சென்ற இடம் கோவிலில்லை,
மருத்து போன இதயங்கள் வசிக்கும்
மருத்துவ மனை!!
-Siva

எந்த நிறத்திலே அழகிருக்கு?


கருமை நிறமென்று குயில்,
கூவ கூச்சமுற்றதுண்டா? 

நீல நிறமென்று  கடல்,
நித்தம் வருந்தியதுண்டா? 

நிறமில்லையே என காற்று, 
சித்தம் கலங்கியதுண்டா?

உடலில் ஓடும் செங்குருதி,தன் 
நிறமாறினால் சங்குருதி! 

எந்த நிறத்திலே அழகிருக்கு? 
நிறம் மாற நினைப்பதும் எதற்கு?

தன்நிறத்தில் தன்னிறைவுற்றால்,
எல்லா நிறத்திலும் அழகிருக்கு! 

-Siva

மீன் -குட்டி கவிதை

நீந்தாமல் மேலே வந்த மீனும், 
உழைக்காமல் மேலே வந்த ஆணும் 
எப்போதும் ஓன்று தான்!!!

-Siva

வண்ணமாக பிறந்தால்,
கண்ணாடிப் பெட்டிக்குள் 
திண்ணமாக பிறந்தால்,
மண் குழம்பு சட்டிக்குள்!
கண்ணீரோடு மீன்!!!
-Siva



Sunday, August 17, 2014

மகளே மகளே

தனக்கு கொடுத்த மிட்டாயை
தாராள மனம் கொண்டு,
"ஆ" திற என்று சொல்லி,
அன்பாய் வாயில் ஊட்டுவாள்! 

குளிரும் தேகம் என்றெண்ணி 
குளித்து நான் முடித்ததும் ,
குடு,குடுவென ஓடி வந்து, 
குட்டி துண்டை முன்னே நீட்டுவாள் ! 

பேச வாய் திறக்கும் முன்னே
பாசம் பேச நினைக்கிறதே, 
பிஞ்சு தளிர் சிந்திய துளி நீர், 
நெஞ்சம் முழுக்க நனைகிறதே!

-Siva

மழை

மேகத்தில் பிறந்த பிள்ளையாய்
மேல தாள ஒலியுடன், 
மின்னைல் ரேகை கையை மூடி, 
மேனி ஆடை இல்லாமல், 
மேதினியில் தவழ வந்தாள் !

மெத்தை வீட்டின் கதவுகள் 
மேற்கு வாசலில் மூடியிருக்க, 
மேற்கூரை ஓட்டை வழி, 
மெல்ல மெல்ல இறங்கி
மேசை மேலுள்ள தட்டில்,
மெல்லிசை ஒன்றை பாடினாள் !
மெழுகிய தரையில் சிதறி 
மெழுகாய் கறைந்து ஓடினாள் !

மேடு பல்லம் மேல் விழுந்தால்
மேலும் அடிவிழும் என்றெண்ணி,
மண்ணெனும் வளர்ப்பு தாய்
மெத்தை விரித்த புல்லின் பாயில்,
மடியில் வைத்து ஏந்தினாள்! 
முத்த சேற்றை குழைத்துவைத்து
முகம் முழுக்க பூசினாள்!

மலர் இதழில் உறங்கி , 
மலை அருவியில் இறங்கி,
மாலை பொழுதில் கிறங்கி, 
மழலை மொழியில் பேசி ,
மழைத்துளி மனம் வருந்தி மனிதனிடம் சொன்னதென்ன?

முன்ஜென்மம் ஒன்றில் , 
மும்மாரி் உன் முகம் பார்க்க 
முற்றத்தில் வந்து காத்திருப்பேன் ,
மர நிழலில் இளைப்பாறி
மழலை கூட்டத்தில் விளையாடி ,
மறுநாள் மண்ணில் மறைந்திடுவேன்!

மீண்டும் அந்த காலத்தை
மீட்டுவர நினைத்தாலும்,
முடியாமல் தானே போகும்!
மாசு காற்றில் முகம் மூடி,
மடியாமல் என்னுயிர் நோகும்!
முறிந்து போன கிளைகளும்
மூச்சு முட்ட ஏக்கத்திலே ,
மூளையில் முடங்கி சாகும்!

மூவாயிரம் ஆண்டுகள் ,
முன்தோன்றிய தமிழினத்தை
முப்பதாண்டில் ஒழித்த இனம்,
மழையினம் அழிக்க பார்த்தால்
முத்தாய் பொழிந்த ஆலங்கட்டியும் ,
முப்பொழுதும் அமிலமாகாதோ?
முகவரி தேடி அலைவதே, நம்
முழுநேர வேலை என்றாகாதோ !

-Siva

Wednesday, August 6, 2014

எங்கே இருக்கிறாய் இறைவா?

எங்கே இருக்கிறாய் இறைவா?
ஏழை கண்களுக்கு மறைவா!
வறுமை என்னும் வீட்டுக்குள்ளே,
வாடகை இன்றி வசிக்கிறோமே!
கஞ்சிக்கும் கூட வழியில்லாமல்,
காற்றை தினமும் புசிக்கிறோமே!

பணமெனும் பழைய விருந்தாளிய,
பார்த்து ரொம்ப நாளாச்சே!
பாக்கு வெத்தல வச்சு பார்த்தும்,
பக்கம் வர மறுக்கிறதே!
வட்டி கடன் மட்டும் தான்,எங்கள்
வாழ்க்கை முழுக்க வருகிறதே!

கனவை சுமந்த எங்கள் பிள்ளை,
கற்களை தலையில் சுமக்கிறதே!
பள்ளி கூடம் போகும் கால்கள்,
பாலைவனம் நோக்கி போகிறதே!
கள்ளி செடியின் படுக்கை மேலே,
காலை நீட்டி உறங்குகிறதே!

எங்கே இருக்கிறாய் இறைவா?
உன்னருளில் என்ன குறைவா?
புன்னகை எங்கள் இதழோரம்,
பூட்டி கிடக்கிறது திறவா!
ஏழை கண்ணீர் துடைக்க விரைவா,
மறுமுறை மண்ணிலே பிறவா!!

-Siva

Sunday, August 3, 2014

குட்டி கவிதை -2(நட்பு)

முன் பின் தெரியாத முகத்திற்கு,
அன்பின் அடையாளம் கொடுத்து,
நம் பின் நாளும் வரும் சொந்தமே
நட்பு!!
-Siva

Saturday, July 26, 2014

குட்டி கவிதை -1

செடியின் மடியில் பூத்த மல்லிகை, 
நொடியில் நாரிலே மடிவதெல்லாம் 
நங்கை கூந்தலில் புதைய தான்! 

-Siva 

Thursday, July 24, 2014

யார் இந்த தீவிரவாதி ?

துப்பாக்கி உரிமம் வாங்கவே துப்பில்லாதவன்,
பல அப்பாவி உயிர்களை வாங்குவான்,
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்,
கருணை என்ற பக்கத்தை கிழித்து
காகித கப்பல் செய்து விளையாடி ,
கடைசியில் குப்பையில் வீசுவான்!

பனைய கைதிகளை பணத்துக்காக
பினக்குவியல்களை சினத்துக்காக ,
தினமொரு திருவிளையாடல் ஆடி
தீராத விளையாட்டுப் பிள்ளையாவான்!
ஜெயிலின் கம்பிகளில் அடைத்து வைத்தால்
ரயிலின் பெட்டிகளை வெடிக்க வைத்து ,
வெயிலின் வீதியில் உலா வருவான்!

அமைதி சீட்டை காலில் சுமந்து,
வானில் பறக்கும் வெண்புறாவையும்
வேட்டையாடி வீழ்த்திடுவான் !
சமாதி கட்ட செலவில்லாமல்,நம்
சடலத்தை எங்கோ தூக்கிஏறிந்து,
நிம்மதி வாழ்வில் தேடிடுவான் !

யார் தான் இந்த தீவிரவாதி ,
நாளும் அவனே தலைப்பு செய்தி,
நடக்கும் கொடுமையில் பாதி,
அழிந்து போன கொடிய மிருகத்தில்
அழியாமல் இருக்கும் மிச்சம் மீதி!

-Siva

இளம்பிள்ளை வாதம் (argument)

சுதந்திரம் எனது பேச்சுரிமைனு
சொன்னாங்க சுதேசி ஆளுங்க ,
பேச்சு வந்ததால எங்க சுதந்திரம்
போச்சுனு சொல்லுறோம்
ஏன்னு கேள்வி கேளுங்க!
இடுப்பை விட்டு இறங்கி வந்து 
இரண்டு வருடம் கூட ஆகல,
படிப்பை எங்க தலையில கட்டி,நீங்க
படுத்தும் பாடோ தாங்கல!

அரிசியில கை பிடிச்சி நீங்க
ஆனா ஆவன்னா எழுதினீங்க,
அரிஸ்‌டாடல் தத்துவத்தை
அதுக்குள்ள எனக்கேன் சொல்ரீங்க?
பாடி களிக்கும் இந்த வாயால
வாய்ப்பாடு ஏன் கேட்கிறீங்க ?
ஓடி விளையாடும் வயசுல
ஒட்டக பை சுமை எதுக்குங்க?

பள்ளி விடுமுறை நாட்களிலே
துள்ளி ஆட நினைத்தாலும்,
சொல்லி கொடுக்கிறேன் வாவென்று
கொள்ளிய கனவுல வைப்பீங்க!
தள்ளி சென்று போக்கு காட்டினால்
கிள்ளி விட்டு அழ வைப்பீங்க!
சல்லி காசு பெறாத மதிப்பெண்ணிற்கு
ஜல்லிக்கட்டு காளையா மல்லுகட்டுவீங்க!

புழுதி மண்ணில் புரண்டு ,சட்டை
எழுதிய புது கவிதையை
எழுத்து கூட்டி வாசிக்குமுன்,
புத்தகத்தை திறக்க சொல்லி,
புழுவை போல் துடிக்க வைப்பீங்க!
கோடைக்காலம் வந்தால்
கொண்டாட்டம் என பார்த்தால்,
கோச்சிங் வகுப்புக்கு அனுப்பி
கொத்தடிமையா மாத்துவீங்க !

பட்ட படிப்பை முடிக்க
பல காலம் மீதம் இருக்கு,
பட்டம் விடும் ஆசைதான்
பகல் கனவாய் போனதெனக்கு!
அலையாடும் அந்த கடலைப்போல
விளையாடி மகிழ இந்த உடலிருக்கு,
விலைபேசி நீங்கள் விற்ற பின்னும்
விடியலுக்காக இன்னும் காத்திருக்கு!
-Siva.

Saturday, July 5, 2014

வெடிகுண்டு

பாறை உடைக்க பிறந்தாய், 
படி படியா ஊர்ந்துவந்து ,இன்று 
ஊரை அழித்து விட்டாய் ! 
தீபாவளி திருநாளில் உன்னை 
தெருவெல்லாம் சிதற விட்டோம்,
தீவிரவாதி மூலமா நீ ,
திரும்ப வந்து பழிதீர்த்தாய் !
துப்பாக்கி குழலில் புகுந்து,பல
அப்பாவிகளின் தூக்கம் கெடுத்தாய்!

எவனோ செய்த பிழைக்கெல்லாம்
எங்களிடம் கோவமாய் பேசினாய்!
பள்ளி என்று கூட பார்க்காமல்,
துள்ளி விளையாடும் குழந்தையை
தூரத்தில் தள்ளி வீசினாய்!
அமைதி தேடி வருவது போல் நடித்து
ஆலயத்திலும் குருதியை பூசினாய்!
நாளும் புகழ் பெற வேண்டி,
நாளிதழில் முதல்பக்கம் ஆனாய் !

அளவில் சிறிதாக இருந்தாலும் ,
அழிவை மட்டுமே காட்டினாய்!
உன் தலையில் கொள்ளி வைத்தால்,
ஊரையே உலையில் ஏற்றினாய்!
இலை மறை காயாக இருந்து,பல
தலைமுறையை தீர்த்து கட்டினாய்!
விலைகொடுக்க முடியா உயிரைக்கூட,
விற்று தீர்த்து வீடு திரும்பினாய் !

பணத்தை தேடி ஓடிய எங்களை
பிணத்தை தேடி ஓட வைத்தாய் ,
இனபடுகொலை என்ற சொல்லில்
இலக்கியம் ஒன்றை எழுதினாய்,
முற்று புள்ளி வைக்க மறந்து
தொற்று வியாதி போல் தொடர்ந்தாய்!

அன்பெனும் தடுப்பூசி போட்டு உன்னை,
அகிலத்தை விட்டு ஓட செய்வோம்!
மறுபடி எங்களை தேடி வந்தால் ,
மண்ணுக்குள் புதைத்து மூடி வைப்போம்! 


-Siva

ஞாபகம்

ஏவுகனையை கட்டி கொண்டு,
ஏன் இந்த பேருந்து செல்லாதோ?
தீவுகளை தாண்டியும் , குட்டி
தேவதையின் ஞாபகம் கொள்ளாதோ ! 
போக்குவரத்து நெரிசலெல்லாம், பெரும் 
போர்க்களம் போல் தோன்றாதோ ! 
சிலப்பொழுது எரியும் சிவப்பு விளக்கு ,
சிந்தும் உதிரம் போலாகாதோ!
மைல் காட்டும் தூரம் தான்,உண்மையில்
உடல் தேடும் உயிரின் இடைவெளியோ !

காலையில் அவளை
கைகளில் ஏந்தினேன்,
கால தாமதம் ஆனதென்று
சட்டென்று இறக்கி சென்றேன்
சத்தம் போட்டு இறுக்கி பிடித்து ,
சட்டயோராம் அவள் கசக்கியது
சற்றும் மாறாமல் இன்னுமிருக்கு!
கை அசைத்து விடைபெறாமால்,
கண்ணீரோடு விட்டு சென்ற,
குற்ற உணர்ச்சி மட்டும் தான்,என்
நெஞ்சம் முழுக்க நெறஞ்சிருக்கு!

அலுவலக கணினிகுள்ளும் ,
பிள்ளை நிலவை பதுக்கி வைத்தேன்,
அடிக்கடி அதனை திறந்து பார்த்து
ஆறுதல் அடைவது போல் நடித்தேன்!
உணவு இடைவெளியின் போதும் ,
உள்ளங்கை அலைபேசியில்,அவளை
கனவாய் பார்த்து கலங்கினேன்!

களைத்து திரும்பிய இந்த உடம்பு,
கதவோராம் ஏன் காத்திருக்கு?
கழுத்தை பிடித்து கொண்டு,
அப்பா அப்பாவென்று அவள்
அலறும் சத்தம் கேட்பதற்க்கு!
இரண்டு மணி நேர இந்த பயணம்
இரவோடு இன்று முடிந்தாலும்,
அப்பா மகள் என்ற உறவோடு,
ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும்
செல்லரித்து போனாலும் என் நா,
செல்லமகளுக்காக செந்தமிழை
பாடிக்கொண்டிருக்கும்!

-Siva

Wednesday, June 25, 2014

மடிக்கணினியில் மல்லிகை பூந்தோட்டம்

மல்லிகை பூந்தோட்டத்தை
மடிக்கணினியில் பார்க்கிறோம்,
மனம் வரவில்லை யென்று,
மனதுக்குள் வேர்க்கிறோம்!
துல்லிய ஒளி கேட்டாலும்,
தெள்ளிய காட்சி யானாலும்,
தொட்டுப்பார்கக ஏங்கினோம்!
மெல்லிய சோகம் ஆனாலும்,
மறுமுனை அறியுமென்று
மறைத்து வைத்து தாங்கினோம்!

காய்ச்சலுல எம் கண்கள்
கண்டபடி சிவந்திருக்கும்,
காணொளியில் கேட்கும்போது,
கண் தூக்கம் இல்லையென்று
கள்ளக் காரணம் சொல்லிடுவோம்!
பரதேசம் பற்றி கேட்டால் மட்டும்,
பிரதேசம் இதை போலில்லையென
பொய்யாக புகழாரம் சூட்டுவோம்,
பிரிவு துயர் வேதனயை எங்கள்,
புறமுதுகில் ஒளித்திடுவோம்!

மதிய உணவு என்னவென்று
அதிகாலையில் கேட்டிடுவோம்,
மீன் குழம்பென்று சொல்லிவிட்டால்
ஏன் இங்கே வந்தோமென்று
எண்ணி எண்ணி ஏங்கிடுவோம்!!
முன்னின்று நடத்தவேண்டிய
மாமன் மகன் மனவிழாவை,
முகநூலில் மட்டும் பார்த்திடுவோம்!
கெட்ட செய்தி ஏதும் வந்தால்,
கிட்ட  இல்லாமல் போனோமென்று
கண்கள் மட்டும் கலங்கிடுவோம்!

சிந்திய ரத்‌தம் உறைந்து
சொந்த தேசம் திரும்பிடுவோம்,
வந்து சேர்த்ததும் ஒருக்கூட்டம்
பந்தா பண்ணுகிறான் பாரென்று,
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும்!
பந்த பாசத்த அடகுவச்சி, எங்கள்
பையில கொஞ்சம் பணமிருக்கும்,
நொந்து போன எங்க நெஞ்சுக்குள்ள,
நூறுகோடி ரனம் இருக்கும்!
கணக்குப் போட்டு பார்த்தா,
நாங்கள் இழந்தது இமயமென்று,
இளம்பிள்ளைக்கு கூட புரியும்!

-Siva

அமைதி தேசத்து அரசன்

அமைதி தேசத்து அரசன் நீ,
மூன்று தமிழில் மூத்தவன் நீ,
சுயநலமில்லா சுந்தரன் நீ,
சோர்ந்து நான் போகமல்,
சேர்ந்து விளையாடும் நண்பன் நீ,
தியாகம் என்ற மகுடத்தை,
தலையில் சூடிய மன்னன் நீ,
தீயாக காத்து என்றும், ஒரு
தாயாக ஆன அண்ணன் நீ!

ரொட்டி துண்ட உன் பாதையில
கொட்டி கொண்டு நீ நடந்த,
குட்டி எறும்பைப் போலே நானும்
கெட்டியாக பின் தொடர்ந்தேன்,
கூட்டி போன தூரத்தை
எட்டி நானும் பார்க்கையில,
எட்டி பிடிக்க முடியா உயரமென்று,
தட்டி கொடுத்தேன்,உன் தோள்மேல!!

உன் வெற்றி பாதையில்,
வலம் வரும் தேர் நான்
என் வெற்றி மாலையில்,
ஒளிந்திற்கும் நார் நீ !
சாம்பலாகி நான் சரிந்தபோது,
ஆம்பலாக்கி் பூக்க செய்தாய்!
தம்பி கைமீது,நம்பிக்கை வைத்து
தன்னமிக்கை ஊட்டினாய்!
திறமைசாலி நானென்று ,
திக்கெட்டும் முழங்க செய்தாய்!

எந்த தேசம் நீ சென்றபோதும்,
என் நேசம் அங்கிருக்கும்,
என் சுவாசம் நின்றபோதும்,
உயிரினில் உன் பங்கிருக்கும்!
பாண்டவரின் புகழை பாட,
பழைய பாரதம் இருப்பதைப்போல்,
நம் புகழை நாளும் பாட,
நாளைய பாரதம் காத்திருக்கும்!
விமானம் ஏறி விரைந்து வா,என்
வின்மீன்கள் உனக்காக பூத்திருக்கும்!

-Siva

பெண் காதல்

கதைகளில் படித்த காதலை,என்
கண் முன்னே காட்டினாய்,
புதிதாய் துடித்த என் இதயத்தை,
பூவுக்குள் வைத்து பூட்டினாய்!
நினைத்து நினைத்து பார்த்து,என்
நிழலுக்கும் வெட்கத்தை ஊட்டினாய்!
மைவிழி பார்வையில் மையல் கொண்டு,
மழையாக மனதினில் ஊற்றினாய் !

நாசி புகும் சிறு தூசியுமறியும்,
என் தும்மல், உன்னை நினைத்தே!
கூந்தல் கலைக்கும் காற்றும் அறியும்,
கைகோதி நான் சரிசெய்வது,
உன் கவனத்தை ஈர்க்கவே!
நிலம் பார்த்து நான் நடப்பது,
வான் நிலவும் கூட அறியும்,
நீ என்னை பார்க்க வேண்டியே!

ஒரு மணி நேர ஒப்பனையெல்லாம் ,
ஓரக்கண் கொண்டு பார்க்காமல்,
ஒழுக்கமானவன் போல் நடிப்பாய்!
ஆடையின் இடைவெளி போதுமென்று,
அருகினில் நெருங்கி அமர்ந்தால்,
தெரியாமல் செய்த பிழையென்று,
தள்ளி சென்று மன்னிப்பும கேட்பாய்!

பாறாங்கல் பாரமா, உன்னை
பார்க்காத இதயம் கனக்கும்,
பார்த்து நீ போனாலே,
பசும்புல்லா எடை இழக்கும்!
பாசக்காயிற எனக்குள்ள வீசுவாய்,
காதல் காலன் நானென்று சொல்வாய்,
பாதியில விட்டு போய் உசுரோட கொல்வாய்!

இரண்டு நிமிடம் நீ பேசியதை,
இரவுமுழுவதும் இமைமூடாமல்,
இதயதுக்குள்ள எழுதி பார்ப்பேன்!
பகல் வேலை வந்த பின்பும்,
பைத்தியம் போல் அதையே
நானும் சொல்லி தீர்ப்பேன்!

பூ விரி்ந்தும் தெரியாத வண்டுப் போல்,
புரிந்தும் புரியாத மண்டுப் போல்,
உன்னை சுற்றி சுற்றி பார்த்திருப்பேன் ,
எப்போது புரியும் என் வலியென்று,
முப்பொழுதும் உனக்காக காத்திருப்பேன்!!

-Siva

Saturday, June 7, 2014

கனவு

ஏறாத மலையேறி ,
எட்டாத உயரத்தை 
எட்டி நாம் பிடித்தாலும்,
அங்கோர் எறும்பு கூட்டம்
அதன் உணவை எடுத்து செல்லும்,
நம் கனவையும் கெடுத்து செல்லும்,
என்னை மிஞ்ச முடியாதென்று
ஏளனமாய் சொல்லி செல்லும் !!

உணவின் தேடலும்,
கனவின் தேடலும் ஒன்றல்ல,
அவமானத்தால் நம் தலை
குனிவதும் நன்றல்ல!
உணவின் தேடலெல்லாம்,
கையிலிருந்து வயிர் வரை ,
கனவின் தேடலெல்லாம்,
காலத்திற்கும் உயிர் வரை!

உணவின் சுவையை நாவறியும்,
கனவின் சுவயை யாரறிவார்?
முயற்சி செய்பவர் மட்டும் அறிவார்,
முழுமதி போல் உணர்வார்,
விழுதலும் ,அழுதலும்
எழுதலுக்கே என்பார்!

காசிற்காக ஒடும் ஒட்டமெல்லாம்,
மேககூட்டம் போலாகும்,
நிலையாக ஓரிடத்தில் நில்லாது
மழையாக மண்ணில் விழும்!
கனவிற்காக ஒடும் ஓட்டமெல்லாம்,
காற்றோட்டம் போலாகும்,
கதவடைத்து போனாலும் ,
சாவித்துவார இடைவெளியில்,
சளைக்காமல் மீண்டு எழும்!

கனவை சுமக்கும் கண்களுக்கு ,
கண்ணீர் என்றும் வராது!
உணவை சுமக்கும் எறும்புகள் ,
உச்சி போய் என்றும் சேராது ,
கனவின் ஓட்டத்தில் சிக்கி,
கண்டிப்பா உயிர் வாழாது!

-Siva

லஞ்சம்

தென்றலுக்கு தேநீர் விருந்து வைப்பேன்,என் 
தேகத்தை மட்டும் தீண்டி போக!

மலர்களுக்கு மரியாதை செய்வேன் ,
இதழ் தேனை எனக்கு தர !

பனித்துளிக்கு பெருந்தொகை தருவேன்,என்
பக்கத்தில் வந்து விளையாட !

மேசையடியில் மேகத்திற்கு காசு கொடுப்பேன்,
மும்மாரி மழை மண்ணில் வர!

காவிரியாறுக்கு கையூட்டு வழங்குவேன்,
கர்நாடகம் விட்டு வர!

தாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்கி தருவேன்,
தமிழகம் விட்டுப் போக !

அந்த ஆண்டவனுக்கே அன்பளிப்பு தருவேன்,
லஞ்சத்திற்கு நஞ்சு கொடுக்க!!!
-Siva

காதலியின் கேள்விகள்

அவளை போல் ஒரு அழகியை 
அருகினில் காட்ட சொல்வாள், 
குவளை நீரை தரையில் தெளிப்பேன், 
குனித்து அவளை பார்த்திட சொல்வேன்,
ஒன்றல்ல, ஓராயிரம் அழகிகள் 
ஒனக்கு முன்னாடி என்பேன்!


நிலவை முத்தமிடிவது அவள் 
நிறைவேறாத ஆசை என்பாள்,
அவள் இதழுக்கு அவள் நெற்றி,
அருகில் இல்லை என்று,
அழகாய் நிதர்சனம் சொல்வேன்!

காதல் எப்படி இருக்கும் என்று
காதினில் செல்லமாய் கேட்பாள்,
தவழும் நம் பிள்ளை போலென்று
தயங்காமல் சொல்வேன்!

உயிரை விடுவது என்றால்
உண்மையில் என்ன என்று கேட்பாள்,
ஊருக்கு உன்னை கூட்டி சென்று
உன் வீட்டில் விடுவது என்பேன்!!!!

நான் இல்லாத வாழ்க்கை ,
எப்படி இருக்கும் என
நயம்பட கேட்பது போலென்னுவாள்,
கண்ணுக்கு தெரியாத தூசி,
கண்ணுக்குள் புகுந்து ,
கண்ணையே உறுத்துவது போல,
காலம் முழுவதும் அழ வைக்கும் என்பேன்!!

-Siva

புகை


நெருப்பையும் பஞ்சையும்
நெறுக்கி செஞ்ச,
காகித பீரங்கியில
நெஞ்சத்த சுட்டாலே,
புரியாத உணர்ச்சிlயிலே,
புத்துணர்ச்சி பொங்குமே!

செந்தழலை பற்ற வைத்து, 
வெண்குழலில் சுற்ற வைத்து,
செவ்விதழை கடக்கும் புகை ,
நுரையீரலில் புற்று வைக்கும்,உன்
வாழ்க்கைக்கும் முற்று வைக்கும் !

விரல் இடையில் பிடிப்பதற்கு
மையூற்றிய பேனா இருக்கு !
விலை கொடுத்து நோயை
வாங்குவதும் எதற்க்கு?
காலத்தை போக்க
கை நிறைய வாய்ப்பிருக்கு,
கைகூப்பி காலனை
அழைப்பதுவும் எதற்கு?

நாகரிகம் என்ற போர்வைக்குள்
நல்ல பாம்பு ஒளிஞ்சிருக்கு!
கை வைத்து பார்த்தவனுக்கெல்லாம்
கைலாயம் காத்திருக்கு!!!
-Siva

பிறந்தநாள் வாழ்த்து

காவி துறவறம் செல்லவில்லை ,
கடும் தவமும் செய்யவில்லை , 
காதில் கேட்கும் ஸ்வரமா, 
எப்படி கிடைத்தாய் வரமா?
கண்டிப்பா குழம்பிடுவான்
அந்த பரலோகத்து பிரம்மா!!! 
-Siva


விவசாயி

உழுது படியளக்கும் விவசாயி 
பழுது பட்டுப்போனோம் சருகாகி,
பொழுது மூன்றிலும் தரிசாகி,
அழுது வேண்டுறோம்,இறைவா 
உன் செவிசாயி! 

ஏரோடு என் கைகள் இணைந்திருந்தா,
சேறோடு என் கால்கள் சேர்ந்திருந்தா,
சந்தோஷ காட்டாரு ஒன்னு ,கறைத்தாண்டி
செல்லுதே காணாத நெஞிக்குள்ள!
கதிறடிக்கும் சத்தம் எங்கள்
காதிற்க்கு ஸ்வரமாச்சி!
முத்திபோன புல்லின் வாசம்,எங்கள்
மூச்சிக் காற்றில் சுகந்தமாச்சி!
வாடிய பயிரைக் கண்டால் மட்டும்,
வாழ்க்கை போனது போலாச்சி!

சில நேரம் வின்னும் ,
பல நேரம் மின்னும்
சதி திட்டம் போடுமே!
அறுவடை மாதத்திற்குள்
கருவழிஞ்சி போகுமெ !
கண்டும் காணாமல் அரசு
கண்ணாமூச்சி ஆடுமே!
வாங்கிய கடனுக்கு மட்டும்
விளைச்சல் இங்கு வந்தா,
நாண்டுகிட்டு சாவதுதான்
நல்ல வழி கந்தா!

-Siva

வெயிலில் மழை

வெயிலில் வந்த ஒரு மழை,
தேகத்தை குளிரூட்டும்
துயிலில் வந்த ஒரு கனா,என்
தேவதைய நினைவூட்டும்!
சதுப்புநில பறவைப்போல்
சிறகடித்து மனம் பறக்கும்!
சாறுப் பிழிந்த செங்கரும்பாக
உன்னுள் சிக்கி உயிர்த்துடிக்கும்!

சிகப்பு விளக்கு போட்டும் ,என்
சிந்தனைப் போக்குவரத்து
உன்னை கடந்து போகும்,
வேகத்தடை பல இருந்தும்,
என்னிதைய வாகனம் ,உன்னில்
குதித்து உயிர் நோகும்!

நெடுஞ்சாலை பயனம் கூட,
நெஞ்சுக்குள் உனை நினைத்தால்
பூஞ்சோலை போலாகும்!
மைல்கல் எழுத்தெல்லாம்,
வழியில் நான் பார்க்கையில,உன்
மையிட்ட விழிப்போலாகும்!
உசர்ஏறி நீ ,உச்சியில ஊர்ந்து வந்தா,
சிறுசேரியும் கூட சொர்கபூமியாகும்!
-Siva

Sunday, May 4, 2014

கிராமத்து தேவதை

தாயம் விளையாடும் கண்ணாலே
என்னை காயம் செய்து போனாலே!
சாயம் ஏதும் இல்லாம,கன்னம்
சிவந்து மாயம் செய்தாலே!

தலைக்கனம் அதிகம் என்று
தலை சூடிய பூக்கள் எண்ணுமே,
பாரம் குறைக்க எண்ணி,இவள்
பாதம் பட்டிங்கு அழியுமே!
பின்னழகுடன் சேர்ந்து இவள்
பின்னலிட்ட ஜடை ஆட்டினாலே,
மின்னலொளியும் கூட,வான
சன்னல் திறந்திங்கு வருமே!

குனிந்த தலை நிமிராம,இவ
நிலம் பார்த்து நடந்தாலே,
முகம் பார்க்க எண்ணி,முழு
நிலவும் வருமே நீரின்மேல!
பட்டு புடவை கட்டி இவள்
எட்டு எடுத்து வைத்தாலே,
மெட்டெடுத்து பாடிவரும்,அந்த
மேக கூட்டம் பின்னாலே!

இடையை தழுவும் மேகலையா
என் கைகள் இன்னும் ஆகலையா?
வண்ண மயிலிறகு மேனி பட்டு
இந்த பெண்ணுடம்பு நோகலையா?
அழகென்ற சொல் இவளழகறிந்து
அகராதி விட்டின்னும் போகலையா?
பெயரளவு பேரழகிகள் எல்லாம்
பொறாமை தீயிலின்னும் வேகலையா?
-Siva



Monday, April 21, 2014

ஏழை மகள்

சேற்று நீரில் மின்னும் செல்ல நிலவே,
கீற்று குடை தரும் குளிர் நிழலே!
காற்று கையில் ஏந்திய கிள்ளை மொழியே ,
மாற்று பிழை என்ன செய்தாயோ,என்
மகளாக பிறந்தாயே மண்ணிலே!

புத்தாடை போட்டு பார்க்க,
புவியளவு ஆசை இருக்கு,
கந்தல் துணி வாங்கவே,
கையில தான் காசிருக்கு!
சத்தான உணவு கொடுக்க,
சத்தியமா விருப்பம் இருக்கு,
கூழுக்கும் வழி இல்லாம,
பத்தியமா வயிறு பசிச்சிருக்கு!

பஞ்சு மெத்தையில் உன்னை கிடத்த
நெஞ்சமெல்லாம் நெனப்பிருக்கு,
சாலையோரம் படுக்கை போட
சாக்கு பைதான் கிடைச்சிருக்கு!
கரடி பொம்மைய உங்கையில் கொடுக்க,
கண் நிரைய கனவிருக்கு
தலையில்லா பொம்மை தான்,குப்பை
தொட்டியில் உனக்கிருக்கு!

நொடியெல்லாம் உனை நினைக்க,இறைவா
படியில் பிச்சை எடுக்க வைத்தாயோ!
உன்னை வணங்காத கை வீனென்று,
ஊரார் கால் வணங்க வைத்தாயோ!
பிறக்கும் போதே இறக்க செய்யாமல்
வாழும் போது இரக்க ஏன் செய்தாயோ!

கர்ம வினை தான் காரணமென்றால்
தர்மமிகு மனிதர்களை தரனியில் தராயோ!
நீண்ட ஆயுளே வேண்டாம்,என்னை
மீண்டும் பிறவாமல் செய்வாயோ!
பிறந்தாலும் மறுமுறை புவியில்,
இரவாத வாழ்க்கை எனக்கு தாராயோ!


-Siva

Sunday, April 13, 2014

தாய்மை

பத்து மாத ரனமெல்லாம்,
செத்து பிழைத்த கனமெல்லாம்,
ஒத்த நொடியில் இவள் மறந்திடுவா!

மழை  ஏந்தும் மண்ணைப் போல
மழலையை மடியில் ஏந்தி,
மன மகிழ்ச்சி அடைந்திடுவா!

முகர முடியா மருந்தையெல்லாம்,
முத்துச்சரம் முகம் பார்த்து,இவள்
முப்பொழுதும் முழுங்கிடுவா!

படுக்கைக்கு ஓரடி இருந்தாலும்,தன்
பிள்ளைக்கு எல்லாத்தையும் கொடுத்து,
பக்கத்தில ஓரமா படுத்திருப்பா !

இறகடிக்காம பறக்கும் பருந்தைப் போல,
இமை ரெண்டும் மூடாமல் இருந்து,
சுமை எல்லாத்தையும் தாங்கிடுவா!

இருபத்திநான்கு மணி நேரமும்
இளம் பிஞ்சுக்காக  உழைத்தாலும் ,
இன்னும் கொஞ்ச நேரம் இரவல் கேட்ப்பா !

பூமியில எத்தனை சாமி இருந்தாலும்,
புதிதாக தாயாகும் பெண்ணெல்லாம்,
பூஜிக்க வேண்டிய சாமிகளப்பா!

-Siva

Tuesday, April 8, 2014

மின்சாரம்

அனு ஓட்டத்திலே பிறந்தாய் ,
மறை எதிர்மறையில் தவழ்ந்தாய்,(+ve,-ve)
பிறந்த இடம் விட்டு பிற ஊருக்கு,
பாஸ்‌போர்ட் இல்லாமல் சென்றாய்!
சிறை பட்டு செல்லில்,(battery)
சிறு துயர் கொண்டாய்!

புகுந்த இடமெல்லாம்
புத்துணர்ச்சி தந்தாய்,
இறந்த சாதனத்திற்கும்,
இன்னுயிரை கொடுத்தாய்!
தகுந்த பாதுகாப்பில்லாமல்
தலைமேல் கை வைத்தால்,
மிகுந்த துயர் அளித்தாய் !

சிவனை போல் சக்தி தந்தாய்,அந்த
எமனை போல் அழிக்கவும் செய்தாய் !
எல்லாத்தையும் வேலை செய்ய வைத்து
எஜமானின் அந்தஸ்தை பெற்றாய்!
உன் ஓட்டம் நின்றாலே ,
ஊர் ஆட்டமும் நின்றிடுதே!

உன்னை இன்று தேடுறோம்
உண்மையிலே வாடுறோம் !
எவன் ஆட்சியில் அமர்ந்தாலும்
எல்லாரையும் சாடுறோம்!
ஆருமாச அம்மாவின் ஆசையெல்லாம்,
அமாவாசை போல ஆனதேனோ!
இருண்ட கண்டம் போல் இந்தியாவிற்கு,
இருள்நாடு என்ற பெயரும் ஏனோ!

-Siva

Saturday, April 5, 2014

காதல் கவிதை

அவள் கால்பட்டழியும் பூக்களெல்லாம்
தான் அழகென்று தலைக்கனம் கொண்ட,
தற்கொலை படைகளே!
கசக்கிப்போட்ட மிட்டாய் காகிதமும் ,
கண்ணை கசக்கி நிற்கும்
அவள் இதழ் தொட முடியா ஏக்கத்தினாலே!
காலை தழுவும் காலனிகளும்
உறங்கும் போது உலரி கொட்டும் ,
அவள் பாதம் பார்க்க முடியா பிரிவினாலே!

விடியலில் பஞ்சனையும் விசும்பும்
விலகியவள் இருக்கும் காரணத்தினாலே !
இறுமாப்புடன் இறக்கும் பட்டுபூச்சி
இவள் இடை தொட்டாட இருப்பதாலே!
இளம்காற்றும் கூட  இலவசம் அறிவிக்கும்,
இவள் மூச்சி வாங்க ஓடியதாலே!
தலை சீவும் சீப்பும் இன்று காவலிருக்கும்,
அவள் கூந்தல் அதில் சிக்குவதாலே!

இருமலை நடுவில் எட்டி பாக்கும் சூரியன்
இவளை ஒருதலை காதல் கொண்டதாலே!
நடுநிசியில் மின்னும் நட்சதிரெமெல்லாம்
இவளை தரிசிக்க காத்திருக்கும் ரசிகர்களே!
காட்டருவி என்பதெல்லாம் இவளின்
காதல் தோல்வியில் கலங்கிய கண்ணீரே!

-Siva