Monday, December 8, 2014

வெட்டியான் சொல்றேன்

பணம் பணம் என்றொரு பயணம்,
கனம் கனமா இங்கு போகிறதே!
மனம் மனம் அதை மதிக்காமல்
இனம் மனிதயினம் செல்கிறதே!
தினம் தினம் இந்த போதயில்,
ரனம் ரனம் சென்ற பாதையில்,
பிணம் பிணமாய் இங்கு குவிகிறதே !

அதிகாரம் எனும் ஆயுதத்தால்,
அனுதினமும் அடக்கி வைத்து ,
சதிகார ஆட்டம் ஒன்னு போட்டீங்க!
விதி வசம் மாட்டிகிட்டு,
சவ ஊர்வலம் ஏறுகிட்டு,
சத்தமின்றி உறங்கும்போது ,
ஆட்டம்போட்டு உங்களை
மண்ணுக்குள் அடக்கிவைப்பேங்க!

பதினாரும் பெற்று ,
பெருவாழ்வு வாழ்ந்தீங்க !
திதி நாளு முடிஞ்சபின்னே,
கதி யாரு உங்களுக்கு ?
நதியோடு சாம்பல் போனப்பின்னே,
நாங்க தானே காவலுக்கு!

வெட்டியான் சொல்றேன்
கெட்டியா கேளுங்க,
இறந்த தேதி ஒன்றென்றால்,
கல்லறையிலே உங்க பெயரிருக்கும் .
நீங்க இரந்த தேதி பலவென்றால் (தானம்)
வரலாற்றிலும்  உங்க வாழ்விருக்கும் !

-Siva

No comments:

Post a Comment