கட்டுமரக்காரன் கைகளில் , கடவுள் தந்த கலங்கரைவிளக்கம் நீ ! எட்டு திக்கு தேடினாலும் , எட்டா புகழுடைய எளியவன் நீ !
நரைநீள் முடியோடு , பிரைவாழ் வானம்போல் கனவுகளை கானச் சொல்லி , இளைஞர்களின் இதயத்தின் திரைதாழ் திறந்தவன் நீ !
அக்னியின் சிறகுகளில் அன்று , ஆகாசத்தில் பறந்தாய் , அடுத்தொரு உலகத்தை ஆராய்ந்து பார்க்க இன்று , ஆவலோடு இறந்தனையோ !
சொற்பொழிவு உனக்கு என்றும் பிடித்த ஒன்று தான் ,உன் முன்னுரையை முடிவுரையாய் முடித்த தினமும் இன்று தான் !
உறங்காமல் உன் இருகண்கள் கண்ட கனவை எல்லாம் , இருநூறு கோடி விழிகள் சேர்ந்து இனி காணும் !