Wednesday, August 26, 2015

ஹைக்கூ

சலூனில் காத்திருப்பதும்,
பலூனில் காத்திருப்பதும்,
எவ்வளவு நேரம் என்பதை,
யாராலும் கணிக்க முடியாது!!
-Siva

சிறை வாசம்

நாளை முதல்!
பாமரன் சிரத்திற்கு சிறை வாசம்,
காவலன் கரத்திற்கு சில்லரை வாசம்!!

-Siva

காலத்தால் அழியா கலாம்

கட்டுமரக்காரன் கைகளில் ,
கடவுள் தந்த
கலங்கரைவிளக்கம் நீ !
எட்டு திக்கு தேடினாலும் ,
எட்டா புகழுடைய
எளியவன் நீ !


நரைநீள் முடியோடு ,
பிரைவாழ் வானம்போல்
கனவுகளை கானச் சொல்லி ,
இளைஞர்களின் இதயத்தின்
திரைதாழ் திறந்தவன் நீ !

அக்னியின் சிறகுகளில் அன்று ,
ஆகாசத்தில் பறந்தாய் ,
அடுத்தொரு உலகத்தை
ஆராய்ந்து பார்க்க இன்று ,
ஆவலோடு இறந்தனையோ !

சொற்பொழிவு உனக்கு என்றும்
பிடித்த ஒன்று தான் ,உன்
முன்னுரையை முடிவுரையாய்
முடித்த தினமும் இன்று தான் !
உறங்காமல் உன் இருகண்கள்
கண்ட கனவை எல்லாம் ,
இருநூறு கோடி விழிகள்
சேர்ந்து இனி காணும் !

கலங்காமல் போய்வா
காலத்தால் அழியா கலாமே!
-Siva