Tuesday, July 16, 2013

மதுக்கடை

பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என 
ஊருக்குள்ளே சொன்ன பாரதியைத் தேடு !

பார்கள்(BAR) பல உள்ள நாடு தமிழ்நாடு என 
பாருங்கள் இந்த வெட்க்க கேடு !

போரடித்து வாழ்ந்த மூத்தகுடி என்ற பெருமைப் போச்சு
பீரடித்து வாழும்  குடி என்றநிலை எவரால் உருவாச்சு !

பத்து குரளில் கள்ளுண்ணாமை  சொன்னது குரளதிகாரம் 
ஒற்றை இரவில் பத்து மதுக்கடை திறப்பது அரசதிகாரம் !

பெயர்க்கெடும் என அஞ்சி புகையிலை பாக்கிற்கு தடையாம் 
உயிர்க்கெடும் என அறிந்தும் ஏன் இத்துணை மதுக்கடையாம் ?

பாதைமாறி போகும் பிள்ளைகள் என்றும் பாராமல் 
போதையேற்றி பெறுவதென்ன வருமானமா அவமானமா ?

பள்ளிகள் திறந்து மூளையை வளர்த்த அரசு இன்று 
பாட்டிலை திறந்து நுரையீரல் பறிப்பது ஞாயமா ?

போகும் நிலையை பாரு பூந்தோட்டமாய் இருந்த நாடு 
சாகும் நிலை சீக்கிரம் வந்து ஆகும் ஓர்நாள் சுடுகாடு !

-Siva