Wednesday, November 6, 2013

மணநாள்..

புல்லும் முள்ளும் நெறஞ்ச என் பாதயை
பூவாலே நீ போர்த்தி விட்ட!
அல்லும் பகலும் அனல் மூட்டிய என் தனிமயை
அன்பாலே நீ குளிர விட்ட!
சின்னா பின்னமா சிதைஞ்ச என் கனவ
சித்திரமா நீ  செதுக்கி விட்ட!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறந்த என் இதயத்த
கண்ணாலே நீ கட்டி போட்ட!
உண்னாம உறங்காம ஊமையான என் கவிய
உனக்காகப் பாட வச்ச!
மெய்யோ பொய்யோணு நான் தேடிய காதல
நெய்யூற்‌றி நெஞ்சில் எறியவிட்ட!
மேளத் தாள ஒலியுடன் உன் கைப்பிடிக்க
மெல்லினமா என்ன மாத்திப்புட்ட!
எழ் ஏழு ஜென்மம் எனக்கு அமஞ்சாலும்
எல்லாத்திலும் என் மனைவியா நீயே இருப்ப!

-Siva