Monday, April 21, 2014

ஏழை மகள்

சேற்று நீரில் மின்னும் செல்ல நிலவே,
கீற்று குடை தரும் குளிர் நிழலே!
காற்று கையில் ஏந்திய கிள்ளை மொழியே ,
மாற்று பிழை என்ன செய்தாயோ,என்
மகளாக பிறந்தாயே மண்ணிலே!

புத்தாடை போட்டு பார்க்க,
புவியளவு ஆசை இருக்கு,
கந்தல் துணி வாங்கவே,
கையில தான் காசிருக்கு!
சத்தான உணவு கொடுக்க,
சத்தியமா விருப்பம் இருக்கு,
கூழுக்கும் வழி இல்லாம,
பத்தியமா வயிறு பசிச்சிருக்கு!

பஞ்சு மெத்தையில் உன்னை கிடத்த
நெஞ்சமெல்லாம் நெனப்பிருக்கு,
சாலையோரம் படுக்கை போட
சாக்கு பைதான் கிடைச்சிருக்கு!
கரடி பொம்மைய உங்கையில் கொடுக்க,
கண் நிரைய கனவிருக்கு
தலையில்லா பொம்மை தான்,குப்பை
தொட்டியில் உனக்கிருக்கு!

நொடியெல்லாம் உனை நினைக்க,இறைவா
படியில் பிச்சை எடுக்க வைத்தாயோ!
உன்னை வணங்காத கை வீனென்று,
ஊரார் கால் வணங்க வைத்தாயோ!
பிறக்கும் போதே இறக்க செய்யாமல்
வாழும் போது இரக்க ஏன் செய்தாயோ!

கர்ம வினை தான் காரணமென்றால்
தர்மமிகு மனிதர்களை தரனியில் தராயோ!
நீண்ட ஆயுளே வேண்டாம்,என்னை
மீண்டும் பிறவாமல் செய்வாயோ!
பிறந்தாலும் மறுமுறை புவியில்,
இரவாத வாழ்க்கை எனக்கு தாராயோ!


-Siva

Sunday, April 13, 2014

தாய்மை

பத்து மாத ரனமெல்லாம்,
செத்து பிழைத்த கனமெல்லாம்,
ஒத்த நொடியில் இவள் மறந்திடுவா!

மழை  ஏந்தும் மண்ணைப் போல
மழலையை மடியில் ஏந்தி,
மன மகிழ்ச்சி அடைந்திடுவா!

முகர முடியா மருந்தையெல்லாம்,
முத்துச்சரம் முகம் பார்த்து,இவள்
முப்பொழுதும் முழுங்கிடுவா!

படுக்கைக்கு ஓரடி இருந்தாலும்,தன்
பிள்ளைக்கு எல்லாத்தையும் கொடுத்து,
பக்கத்தில ஓரமா படுத்திருப்பா !

இறகடிக்காம பறக்கும் பருந்தைப் போல,
இமை ரெண்டும் மூடாமல் இருந்து,
சுமை எல்லாத்தையும் தாங்கிடுவா!

இருபத்திநான்கு மணி நேரமும்
இளம் பிஞ்சுக்காக  உழைத்தாலும் ,
இன்னும் கொஞ்ச நேரம் இரவல் கேட்ப்பா !

பூமியில எத்தனை சாமி இருந்தாலும்,
புதிதாக தாயாகும் பெண்ணெல்லாம்,
பூஜிக்க வேண்டிய சாமிகளப்பா!

-Siva

Tuesday, April 8, 2014

மின்சாரம்

அனு ஓட்டத்திலே பிறந்தாய் ,
மறை எதிர்மறையில் தவழ்ந்தாய்,(+ve,-ve)
பிறந்த இடம் விட்டு பிற ஊருக்கு,
பாஸ்‌போர்ட் இல்லாமல் சென்றாய்!
சிறை பட்டு செல்லில்,(battery)
சிறு துயர் கொண்டாய்!

புகுந்த இடமெல்லாம்
புத்துணர்ச்சி தந்தாய்,
இறந்த சாதனத்திற்கும்,
இன்னுயிரை கொடுத்தாய்!
தகுந்த பாதுகாப்பில்லாமல்
தலைமேல் கை வைத்தால்,
மிகுந்த துயர் அளித்தாய் !

சிவனை போல் சக்தி தந்தாய்,அந்த
எமனை போல் அழிக்கவும் செய்தாய் !
எல்லாத்தையும் வேலை செய்ய வைத்து
எஜமானின் அந்தஸ்தை பெற்றாய்!
உன் ஓட்டம் நின்றாலே ,
ஊர் ஆட்டமும் நின்றிடுதே!

உன்னை இன்று தேடுறோம்
உண்மையிலே வாடுறோம் !
எவன் ஆட்சியில் அமர்ந்தாலும்
எல்லாரையும் சாடுறோம்!
ஆருமாச அம்மாவின் ஆசையெல்லாம்,
அமாவாசை போல ஆனதேனோ!
இருண்ட கண்டம் போல் இந்தியாவிற்கு,
இருள்நாடு என்ற பெயரும் ஏனோ!

-Siva

Saturday, April 5, 2014

காதல் கவிதை

அவள் கால்பட்டழியும் பூக்களெல்லாம்
தான் அழகென்று தலைக்கனம் கொண்ட,
தற்கொலை படைகளே!
கசக்கிப்போட்ட மிட்டாய் காகிதமும் ,
கண்ணை கசக்கி நிற்கும்
அவள் இதழ் தொட முடியா ஏக்கத்தினாலே!
காலை தழுவும் காலனிகளும்
உறங்கும் போது உலரி கொட்டும் ,
அவள் பாதம் பார்க்க முடியா பிரிவினாலே!

விடியலில் பஞ்சனையும் விசும்பும்
விலகியவள் இருக்கும் காரணத்தினாலே !
இறுமாப்புடன் இறக்கும் பட்டுபூச்சி
இவள் இடை தொட்டாட இருப்பதாலே!
இளம்காற்றும் கூட  இலவசம் அறிவிக்கும்,
இவள் மூச்சி வாங்க ஓடியதாலே!
தலை சீவும் சீப்பும் இன்று காவலிருக்கும்,
அவள் கூந்தல் அதில் சிக்குவதாலே!

இருமலை நடுவில் எட்டி பாக்கும் சூரியன்
இவளை ஒருதலை காதல் கொண்டதாலே!
நடுநிசியில் மின்னும் நட்சதிரெமெல்லாம்
இவளை தரிசிக்க காத்திருக்கும் ரசிகர்களே!
காட்டருவி என்பதெல்லாம் இவளின்
காதல் தோல்வியில் கலங்கிய கண்ணீரே!

-Siva

Wednesday, April 2, 2014

அடுக்குமாடி வாழ்க்கை

வத்திபெட்டிய அடுக்கி வச்சி
வாழ்க்கை இங்கே நடக்குது ,
கத்துக்குட்டிய போல ஒன்றும் ,
கத்துக்கொள்ளாம காலம்போகுது!

ஊட்டிவிட்டு எம்புள்ளைக்கு
பாட்டிக்கதைய யார் சொல்ல,
பெத்தவங்க பக்கத்தில இல்லாம!
படைக்கு நாளும் அஞ்சுரோம்,எங்க
பந்த பாசம் அருகில இல்லாம!
ஆயிரம் வீடு அடுக்கி வச்சாலும் ,
அனாதயா தானே இருக்கிறோம்
ஆதரவு ஏதும் இல்லாம!

எதிர்வீட்டு உருவமெல்லாம்,காந்தத்தின்
இருவேறு துருவங்களோ?
எதிரே சென்றலே ,எட்டி பாக்கமா ஓடுதோ!
துள்ளலிசை பாட்ட,துக்கத்தில கேட்கிறோம்,
மேல இருக்கிறவனுக்கு என்ன மகிழ்ச்சியோ!
குதூகல நேரத்தில் குதிக்க கூட முடியில,
கீழே இருக்கிறவனுக்கு என்ன கஷ்டமோ!

குளமும்,மைதானமும்,சந்தையும்,சாப்பாடும்
உள்ளுக்குள்ளயே இருக்குது,
சவக்குழியோடு சுடுகாடும் சேர்த்திருந்தா,
சௌகரியமா இருக்கும் போய் சேர,
சதுர அடி அதிக விலையென்று,எங்க
சமாதியயும் அடுக்கிடாதீங்க ஓன்றுசேர !

-Siva

Tuesday, April 1, 2014

ஆசை

மேகத்துள் மறைந்த மழையானது,
தாகத்திற்கு ஒரு துளி பறிகிடுமா?
ருசியோடு  கனித்தரும் சிறு மரம்,
பசியாற ஒரு கனி புசித்திடுமா?
களைப்போடு ஓடிவரும் இளம்காற்று,
இளைப்பாற சிறு நிழல் தேடிடுமா ?
செந்தணலில் சென்னி சுடும் சூரியன்,
எந்தநாளேனும் விசிறியால் வீசிடுமா?

சுயநல மனிதா,சொல்வதை கேளு!
மூன்று வீடு வச்சிருந்தாலும்,
மூச்சு போன பின்னாலே,
எந்த வீடும் உனக்கில்ல,
ஆட்டம் முடிந்த பின்னாலே,
அடக்கமாவ அந்த காட்டுக்குள்ள!
சுற்றியுள்ள நிலமெல்லாம் ,
பற்றிக்கொள்ள தவித்தாலும் ,
மண்வசம் நீ போனப்பின்னே,
நெற்றி காசும் கூட ஒனக்கில்ல!

இன வேறுபாடு என்பதெல்லாம்,
இயற்கை அறியாது!
தனக்கில்லா ஒரு வாழ்க்கைய,
தரணியில் வாழுது!
இயற்கை போலொரு வாழ்க்கை
இங்கே இல்லாவிடில்,
இயற்கையோடு வாழ பழகு!
அறவே கூடாதென்று சொல்ல, நான்
ஆதிகால புத்தனில்ல!
அளவா ஆசைப்படுவது என்றும்,
அவனியில குத்தமில்ல!

-Siva