Wednesday, August 6, 2014

எங்கே இருக்கிறாய் இறைவா?

எங்கே இருக்கிறாய் இறைவா?
ஏழை கண்களுக்கு மறைவா!
வறுமை என்னும் வீட்டுக்குள்ளே,
வாடகை இன்றி வசிக்கிறோமே!
கஞ்சிக்கும் கூட வழியில்லாமல்,
காற்றை தினமும் புசிக்கிறோமே!

பணமெனும் பழைய விருந்தாளிய,
பார்த்து ரொம்ப நாளாச்சே!
பாக்கு வெத்தல வச்சு பார்த்தும்,
பக்கம் வர மறுக்கிறதே!
வட்டி கடன் மட்டும் தான்,எங்கள்
வாழ்க்கை முழுக்க வருகிறதே!

கனவை சுமந்த எங்கள் பிள்ளை,
கற்களை தலையில் சுமக்கிறதே!
பள்ளி கூடம் போகும் கால்கள்,
பாலைவனம் நோக்கி போகிறதே!
கள்ளி செடியின் படுக்கை மேலே,
காலை நீட்டி உறங்குகிறதே!

எங்கே இருக்கிறாய் இறைவா?
உன்னருளில் என்ன குறைவா?
புன்னகை எங்கள் இதழோரம்,
பூட்டி கிடக்கிறது திறவா!
ஏழை கண்ணீர் துடைக்க விரைவா,
மறுமுறை மண்ணிலே பிறவா!!

-Siva

No comments:

Post a Comment