Sunday, August 17, 2014

மழை

மேகத்தில் பிறந்த பிள்ளையாய்
மேல தாள ஒலியுடன், 
மின்னைல் ரேகை கையை மூடி, 
மேனி ஆடை இல்லாமல், 
மேதினியில் தவழ வந்தாள் !

மெத்தை வீட்டின் கதவுகள் 
மேற்கு வாசலில் மூடியிருக்க, 
மேற்கூரை ஓட்டை வழி, 
மெல்ல மெல்ல இறங்கி
மேசை மேலுள்ள தட்டில்,
மெல்லிசை ஒன்றை பாடினாள் !
மெழுகிய தரையில் சிதறி 
மெழுகாய் கறைந்து ஓடினாள் !

மேடு பல்லம் மேல் விழுந்தால்
மேலும் அடிவிழும் என்றெண்ணி,
மண்ணெனும் வளர்ப்பு தாய்
மெத்தை விரித்த புல்லின் பாயில்,
மடியில் வைத்து ஏந்தினாள்! 
முத்த சேற்றை குழைத்துவைத்து
முகம் முழுக்க பூசினாள்!

மலர் இதழில் உறங்கி , 
மலை அருவியில் இறங்கி,
மாலை பொழுதில் கிறங்கி, 
மழலை மொழியில் பேசி ,
மழைத்துளி மனம் வருந்தி மனிதனிடம் சொன்னதென்ன?

முன்ஜென்மம் ஒன்றில் , 
மும்மாரி் உன் முகம் பார்க்க 
முற்றத்தில் வந்து காத்திருப்பேன் ,
மர நிழலில் இளைப்பாறி
மழலை கூட்டத்தில் விளையாடி ,
மறுநாள் மண்ணில் மறைந்திடுவேன்!

மீண்டும் அந்த காலத்தை
மீட்டுவர நினைத்தாலும்,
முடியாமல் தானே போகும்!
மாசு காற்றில் முகம் மூடி,
மடியாமல் என்னுயிர் நோகும்!
முறிந்து போன கிளைகளும்
மூச்சு முட்ட ஏக்கத்திலே ,
மூளையில் முடங்கி சாகும்!

மூவாயிரம் ஆண்டுகள் ,
முன்தோன்றிய தமிழினத்தை
முப்பதாண்டில் ஒழித்த இனம்,
மழையினம் அழிக்க பார்த்தால்
முத்தாய் பொழிந்த ஆலங்கட்டியும் ,
முப்பொழுதும் அமிலமாகாதோ?
முகவரி தேடி அலைவதே, நம்
முழுநேர வேலை என்றாகாதோ !

-Siva

No comments:

Post a Comment