Sunday, August 17, 2014

மகளே மகளே

தனக்கு கொடுத்த மிட்டாயை
தாராள மனம் கொண்டு,
"ஆ" திற என்று சொல்லி,
அன்பாய் வாயில் ஊட்டுவாள்! 

குளிரும் தேகம் என்றெண்ணி 
குளித்து நான் முடித்ததும் ,
குடு,குடுவென ஓடி வந்து, 
குட்டி துண்டை முன்னே நீட்டுவாள் ! 

பேச வாய் திறக்கும் முன்னே
பாசம் பேச நினைக்கிறதே, 
பிஞ்சு தளிர் சிந்திய துளி நீர், 
நெஞ்சம் முழுக்க நனைகிறதே!

-Siva

No comments:

Post a Comment