Saturday, June 7, 2014

புகை


நெருப்பையும் பஞ்சையும்
நெறுக்கி செஞ்ச,
காகித பீரங்கியில
நெஞ்சத்த சுட்டாலே,
புரியாத உணர்ச்சிlயிலே,
புத்துணர்ச்சி பொங்குமே!

செந்தழலை பற்ற வைத்து, 
வெண்குழலில் சுற்ற வைத்து,
செவ்விதழை கடக்கும் புகை ,
நுரையீரலில் புற்று வைக்கும்,உன்
வாழ்க்கைக்கும் முற்று வைக்கும் !

விரல் இடையில் பிடிப்பதற்கு
மையூற்றிய பேனா இருக்கு !
விலை கொடுத்து நோயை
வாங்குவதும் எதற்க்கு?
காலத்தை போக்க
கை நிறைய வாய்ப்பிருக்கு,
கைகூப்பி காலனை
அழைப்பதுவும் எதற்கு?

நாகரிகம் என்ற போர்வைக்குள்
நல்ல பாம்பு ஒளிஞ்சிருக்கு!
கை வைத்து பார்த்தவனுக்கெல்லாம்
கைலாயம் காத்திருக்கு!!!
-Siva

No comments:

Post a Comment