Saturday, June 7, 2014

வெயிலில் மழை

வெயிலில் வந்த ஒரு மழை,
தேகத்தை குளிரூட்டும்
துயிலில் வந்த ஒரு கனா,என்
தேவதைய நினைவூட்டும்!
சதுப்புநில பறவைப்போல்
சிறகடித்து மனம் பறக்கும்!
சாறுப் பிழிந்த செங்கரும்பாக
உன்னுள் சிக்கி உயிர்த்துடிக்கும்!

சிகப்பு விளக்கு போட்டும் ,என்
சிந்தனைப் போக்குவரத்து
உன்னை கடந்து போகும்,
வேகத்தடை பல இருந்தும்,
என்னிதைய வாகனம் ,உன்னில்
குதித்து உயிர் நோகும்!

நெடுஞ்சாலை பயனம் கூட,
நெஞ்சுக்குள் உனை நினைத்தால்
பூஞ்சோலை போலாகும்!
மைல்கல் எழுத்தெல்லாம்,
வழியில் நான் பார்க்கையில,உன்
மையிட்ட விழிப்போலாகும்!
உசர்ஏறி நீ ,உச்சியில ஊர்ந்து வந்தா,
சிறுசேரியும் கூட சொர்கபூமியாகும்!
-Siva

No comments:

Post a Comment