Saturday, June 7, 2014

விவசாயி

உழுது படியளக்கும் விவசாயி 
பழுது பட்டுப்போனோம் சருகாகி,
பொழுது மூன்றிலும் தரிசாகி,
அழுது வேண்டுறோம்,இறைவா 
உன் செவிசாயி! 

ஏரோடு என் கைகள் இணைந்திருந்தா,
சேறோடு என் கால்கள் சேர்ந்திருந்தா,
சந்தோஷ காட்டாரு ஒன்னு ,கறைத்தாண்டி
செல்லுதே காணாத நெஞிக்குள்ள!
கதிறடிக்கும் சத்தம் எங்கள்
காதிற்க்கு ஸ்வரமாச்சி!
முத்திபோன புல்லின் வாசம்,எங்கள்
மூச்சிக் காற்றில் சுகந்தமாச்சி!
வாடிய பயிரைக் கண்டால் மட்டும்,
வாழ்க்கை போனது போலாச்சி!

சில நேரம் வின்னும் ,
பல நேரம் மின்னும்
சதி திட்டம் போடுமே!
அறுவடை மாதத்திற்குள்
கருவழிஞ்சி போகுமெ !
கண்டும் காணாமல் அரசு
கண்ணாமூச்சி ஆடுமே!
வாங்கிய கடனுக்கு மட்டும்
விளைச்சல் இங்கு வந்தா,
நாண்டுகிட்டு சாவதுதான்
நல்ல வழி கந்தா!

-Siva

No comments:

Post a Comment