Thursday, July 24, 2014

யார் இந்த தீவிரவாதி ?

துப்பாக்கி உரிமம் வாங்கவே துப்பில்லாதவன்,
பல அப்பாவி உயிர்களை வாங்குவான்,
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்,
கருணை என்ற பக்கத்தை கிழித்து
காகித கப்பல் செய்து விளையாடி ,
கடைசியில் குப்பையில் வீசுவான்!

பனைய கைதிகளை பணத்துக்காக
பினக்குவியல்களை சினத்துக்காக ,
தினமொரு திருவிளையாடல் ஆடி
தீராத விளையாட்டுப் பிள்ளையாவான்!
ஜெயிலின் கம்பிகளில் அடைத்து வைத்தால்
ரயிலின் பெட்டிகளை வெடிக்க வைத்து ,
வெயிலின் வீதியில் உலா வருவான்!

அமைதி சீட்டை காலில் சுமந்து,
வானில் பறக்கும் வெண்புறாவையும்
வேட்டையாடி வீழ்த்திடுவான் !
சமாதி கட்ட செலவில்லாமல்,நம்
சடலத்தை எங்கோ தூக்கிஏறிந்து,
நிம்மதி வாழ்வில் தேடிடுவான் !

யார் தான் இந்த தீவிரவாதி ,
நாளும் அவனே தலைப்பு செய்தி,
நடக்கும் கொடுமையில் பாதி,
அழிந்து போன கொடிய மிருகத்தில்
அழியாமல் இருக்கும் மிச்சம் மீதி!

-Siva

No comments:

Post a Comment