Saturday, September 6, 2014

காயிலாங்கடை வியாபாரி

சுற்றும் விளக்கை தலையில் சூடி,
குற்றுயிரை மடியில் சுமந்து ,
பிள்ளை போல் அலறிக் கொண்டு,
வெள்ளை தேவதை ஓடினாள் !

அருகே இருக்கும் ஆலயம் தேடி,
ஆண்டவனை பார்க்க காத்திருந்து ,
ஆறுதலின்றி வெளியே வாடினாள் !

காணிக்கை செலுத்த வழியில்லாமல்,
கண்ணீர் தவிர மொழியில்லாமல்,
காலனின் கைகளில் உயிரை விற்று,
காயத்தை மட்டும் நெஞ்சில் சுமந்து ,
கதறியழுது வீடு திரும்பினாள்!

அவள் கடவுளாய் பார்த்தவன் கடவுளில்லை ,
கைக்கொரு விலை, காலுக்கொரு விலைபேசும்
காயிலாங்கடை வியாபாரி!
அவள் கூட்டி சென்ற இடம் கோவிலில்லை,
மருத்து போன இதயங்கள் வசிக்கும்
மருத்துவ மனை!!
-Siva

No comments:

Post a Comment