Tuesday, October 21, 2014

வேடந்தாங்கல் பறவை

வேடந்தாங்கல் பறவைப் போல,
வேறு தேசம் விட்டு எனக்காக வந்தாய்!
வேகமாக போகும் என் புறவழி சாலையில்,
வேலிப்போடும் சுங்கமாக நின்றாய்!
மண் பதிந்த பேருந்து கண்ணாடியிலும் ,
உன் பெயரை என்னோடு எழுத வைத்தாய்!
பார்க்கும் இடத்தில் எல்லாம் தெரிந்து,
கடவுள் நீ என குழம்ப வைத்தாய்!
என்னுள் இருக்கும் காதலை,
எழுத்து கூட்டி படிக்க வைத்தாய்!
புரிந்து கொள்ள நினப்பதற்குள்,
எரியும் கொள்ளியில் என்னை ஊற்றினாய்!
வரப்போற பூக்கள் போல,
உன் காலுக்கடியில்
காதலும் இன்று நசுங்குதடி!
சிறப்பான நடிகை நீயென்று,
சில நொடிகளில் புரிந்ததடி!
கண்களை முந்திக்கொண்டு,
இதயம் கலங்கி நிற்குதடி!
ஆறுதல் சொல்ல ஆளைத்தேடி,
அடுத்தநொடி உன்னை தேடுதடி!
உன் தும்மல் காற்றோடு,
என்னையும் தூக்கி எறிந்தாய் ஏனடி!
காதலை கடவுள் என நம்பி,
கடைசியில் நாத்திகன் ஆனேனடி!!
-Siva

No comments:

Post a Comment