Tuesday, June 25, 2013

தன்னபிக்கை

கட்டிய கூடு கலைந்தாலும் 
கவலைக் கொள்ளாதே சிறு தேனீ !

வெட்டிய மரம் சாய்ந்தாலும் 
வேரூன்றி முளைக்குமே சிறு தளிர் !

தட்டிய மேளம் தளர்ந்தாலும் 
தாளங்கள் தர அவை தவிப்பதில்லேயே !

கொட்டிய மழை தீர்ந்தாலும்
கோடையிலும் அவை வர மறப்பதில்லேயே !

ஊட்டிய அன்னையை பிள்ளை உதைத்தாலும்
உணவளிக்க அவள் மறுப்பதில்லேயே !

பூட்டிய இதழ் விரித்து இறப்பினும்
புன்முரிவல் புரிவோம் அந்த பூவாக!

வாட்டிய துன்பங்கள் வதைத்தாலும்
வாழ்வோம் வாழ்க்கை நேராக!

ஈட்டிய தோல்விகளில் இதயம் வலித்தாலும்
ஈடேறும் எண்ணங்கள் சீராக!

எட்டிய உயரங்கள் சிகரம் என்றாலும்
எழுவாய் இன்னும் வானாக!

சூட்டிய மகுடம் உன்  சுற்றத்தார் காண்பர்
சுழல்வாய் அந்த புவியாக !

-Siva 

தன்னபிக்கையை வலியுறுத்தி நான் எழுதிய முதல் கவிதை "ட்டிய" என்னும் மோனை இந்த கவிதை முழுவதிலும் பாடப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment