Tuesday, June 25, 2013

தொலைந்த நினைவுகள்

கண்பேசி வந்த காதலை காணோம் இன்று 
கைபேசி(Cellphone) காதலில் தொலைந்து போனோம்!

நட்பிற்கு நாலு பக்கம் எழுதிய கடுதாசி இன்று 
ஒப்பிற்கு நாற்பது எழுத்து குறும் செய்தியாச்சி(SMS) !

மூன்று அகவை(Age) அன்னைமடி இன்று 
ஒன்னரை அகவை ஆனதடி !

பல் முலைக்கும் முன்னே
பாடம் படிக்க ஓடுதடி !

காலம் தெரியாமல் ஆடிய மைதானத்திலே
காண்பதிற்கு இனி ஒருவரும் இல்லே !

கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் பொக்கிஷமாய் பெட்டியிலே !
மெகாபிக்சல் படமோ கணினி குப்பைத் தொட்டியிலே(RecycleBin) !

இரைச்சலிடும் வானொலியில் கேட்பதெல்லாம்
எங்கள் தலைமுறை ஓலங்கலே!

கோடுவிழும் தொலைக்காட்சியில் தெரிவதெல்லாம்
நாங்கள் தொலைத்தக் காட்சிகளே !

ஐபாடு ,ஐபேடு அத்தனையும் தூக்கிப்போடு .
தொலைந்த அந்த  நினைவுகளை மீண்டும் ஒருமுறைத் தேடு !

-Siva



நான் அனுபவித்து எழுதிய கவிதை இது ...இதில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவம் மூலமாக எழுதப்பட்டது !

No comments:

Post a Comment