Tuesday, June 25, 2013

அறிவியல் கவிதை

துருவம் இரண்டிருக்க உன் புருவம் எனை ஈர்க்கும் 
கண்கள் என்ன காந்தமா ? [Magnetic theory]

வெள்ளி வெடிப்பினால் அல்ல பெண்ணே உன் 
இதைய துடிப்பினால் தோன்றியதென்ன பிரபஞ்சமா  ? [Big Bang theory]

உன் பரிவிலே பிறந்து பிரிவிலே இறந்து 
செத்து பிழைத்தேன் இது என்ன சக்தியோ ? [Energy theory]

எண்ணை அறிய வைத்தது கணிதம் இன்று 
என்னையே அறிய வைத்தது உன் புனிதம் ! [Maths]

பூஜ்யம், ஒன்று போதும் கணினி வாழ  !
ராஜ்ஜியம் நூறு வேண்டும் கன்னி உன்னுடன் ஆல! [Computer Binary]

இதையதிற்கு காற்றை கிடத்தும் உன் இரத்தம் 
என்னையும் கூட்டி செல்லாதோ நித்தம் ![Biology Respiration]

காண்பதற்கரியப் பொருள் ஆவர்தன அட்டவனையில் உண்டு 
கன்னி இவள் கடுகிடையும் அதில் ஒன்று ! [chemistry periodic table]

புறவிசை இல்லாமலே உனைநோக்கி நகர்ந்தேன் 
தோற்றது நியூட்டன் விதி என வியந்தேன் ! [newton first law]

-Siva


ஒரு சில அறிவியல் விதிகள் எப்படி காதல் முன் வேலை செய்யாது என்பதற்கு இந்த கவிதை ஒரு எடுத்துகாட்டு

1 comment: