Tuesday, June 25, 2013

மெட்டுக்கு பாட்டு -1

[male voice....]
காற்றில்லாத க்ரஹம் நானடி
எனை மையல் கொண்ட புயல் நீயடி!

உன்னால் என் வானிலே இருசூரியன் உதிக்குதடி
பணியை போலே உருகினேன்

மின்மினி பூச்சிக்கு எதுக்கு நிலா வெளிச்சம்
மின்னல் பெண்ணே முன்னால் வா வா !

உனை பார்த்ததுமே நெஞ்சில் காயம்
கடும் பாரை நான் ,கொடி முல்லை நீ
என்னுள் உன் வேர் அதிசயம் !

[காற்றில்லாத க்ரஹம் ...]

வெட்டருவா வீச்சுதான் உன் கண்கள்
துண்டாகுதே எந்தன் நெஞ்சு

போதும் பெண்ணே இந்த கருணைக் கொலை.

யாழிசையே உனை மீட்டவா
முத்தத்தாலே எனை மீட்டு தா

[female voice....]
பல்லவி இல்லா பாட்டுக்கு இல்லையே
இசையில் என்றுமே அர்த்தம் !

அன்பு கண்ணனே அருகில் நீயில்லா
வாழ்க்கைக்கு ஏதடா அர்த்தம் !

பதநீரை போலே மாறவா
பருகிட வாதலைவா

பசி தீர பார்த்தாய் ஒரு பார்வை
அந்த அன்பால் அதிர்ந்தேன்!.

[male voice....]
விண்வெளி வசம் ஆனதே
அனிச்சம் மலர் பூக்குதே

உனை பார்த்த நொடி தெரிவது அன்னைமடி .
காலம் முழுக்க உறங்குவேன் ..

-Siva


ரஹ்மானின் கஜினி படத்தில் வரும் "khasisey mujhey tum milgayi" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு 

No comments:

Post a Comment