Monday, June 24, 2013

பெண்கல்வி

தாய்நாடும்  ,தாய்மொழிம்  ,ஆறும் ,ஆழியும் 
தரணியில் பெண்மையே !

அவளின் கல்வி, வாழ்க்கைக்கு ஒளி என்பது 

ஊரரிந்த உண்மையே !

மூடரின் சூழ்ச்சியில் முந்நூறு ஆண்டுகள் 

முடங்கி கிடந்த  பெண்மை எங்கே தேடு !

அவளின் கல்வியறிவால் கைவிளங்கு உடைந்து 

எழுச்சி பெற்றது இந்த நாடு !

அடுபாங்கரை அவள் இடம் ,மகபேறு அவள் தொழில் என்றீர்

பெரும்பேறு பெற்று இன்று கலங்கரை விளக்கமாய் பெண்டீர் .

பாருக்கு பெண் வலியென கூறிய இதயமே

பார் அவளை விண்வெளியிலே இனி அவள் விடிவிற்கு உதயமே !

-Siva


பெண்கல்வி  பற்றி நான் எழுதிய முதற்கவிதை . மென்பொருள் நிறுவனத்திற்காக நான்  தொலைத்த தமிழை தேடித்தந்து ,இன்றும் தொலையாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வைத்த பெருமை இந்த கவிதையையே சேரும் ..

No comments:

Post a Comment