Tuesday, June 25, 2013

குட்டி தேவதை-குட்டி கவிதை

பத்துமாத பிரை ஒன்று 
பௌர்ணமி என்றாச்சு!

மூழ்கி கிடந்த சங்கில் 
முத்துதிரும் நாளாச்சு!

எட்டாவது அதிசயம் ஒன்னு  
என்னை எட்டி எட்டி பார்த்தாச்சு !

குளிர்விக்கும் சூரியன் ஒன்னு என்
குலத்தினில் உதயம் ஆச்சு!

குறுஞ்சிரிப்பு முகம் பார்த்து
குருஞ்சிப் பூ பூத்தாச்சு !

முதல் எழுத்து நான் தர என்
உயிரெழுத்து நீ என்றாச்சு!

கற்றது தாய்மொழி தமிழேனும்
பெற்றது பிள்ளைமொழி  
என்றாச்சு!

முத்தமிழை நான் பாடி கண்ணத்தில்
முத்த மழை பொழிஞ்சாச்சு!

குத்துவிளக்கு நீ ஒளிர நம்
குடும்பம் குதூகலம் 
ஆச்சு!

-Siva


என் குட்டி தேவதை பூமியில் (20th  மே 2013) அடிஎடுத்து வைத்த சந்தோஷத்தில் நான் எழுதிய குட்டி கவிதை .

1 comment: