Tuesday, June 25, 2013

ஈழ தமிழனின் ஏக்கக் கேள்வி

முப்பது ஆண்டுகள் நடந்தது
போர் என தெரியவில்லையா ?

அப்போது அது இனப்படுக் கொலையின்
வேர் என புரியவில்லையா ?

முளையிலே கில்லாமல் எங்கள்
மூளைச் சிதரவில்லையா ?

சகதிகள் பல கடந்து உங்கள் நாட்டுக்கு
அகதிகளாய் வரவில்லையா ?

துப்பாக்கி தோட்டாக்களை நெஞ்சில் ஏந்திய
துர்பாக்கிய சாலிகள் நாங்கள் இல்லையா?

எங்களவனின் இனத்தை இராணுவம் அழித்தும்
சிங்களவனின் ஆணவம் தீரவில்லையா ?

ஈழம் எங்களின் எதிர்காலம் என்று
பாழும் அரசியல் நடக்கவில்லையா?

காலம் கடந்து அது காலாவதியானது என
ஓலமிடும் நரிகள் அறியவில்லையா?

ஆதாரம் நூறு உண்டு அரங்கேறிய போர் குற்றதிர்க்கு
வாழ்வாதாரம் தருபவர் யார் எங்கள் சுற்றத்திர்கு !

-Siva


ஈழம் என்று பாழும் அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள எளிய நடையில் நான் இயற்றிய கவிதை.

No comments:

Post a Comment