Tuesday, June 25, 2013

மெட்டுக்கு பாட்டு -2

என் உயிரே ,என் உயிரே (8)

உனது விழி ...
கரும் புதை குழி ..

வெறும் பார்வை பார்த்தாய்,விரும்பி அதில் விழுந்தேன்
வெளிவர மறுப்பேன் இறப்பினும்!

இரு துளை குழல்போல் சிறு நாசி இருக்க
இவள் சுவாசத்தில் தோன்றும் இன்னிசை !

கார் அருவியொன்று பொழியுது,காது அருகே
வேறொன்றும் இல்லை உன் கூந்தலே!

முழு பெறா நூல் உள்ளது முகத்தில்
அதன் காரணம் அதிலும் இரு இதழ்களே !

உனது பற்கள் ,வெள்ளை பளிங்கு கற்கள்
இதழ் விரித்து சிரித்தால் ,இவள் பூவென தோன்றும்
மலர் வண்டு வருமே வாசத்தில்!

இளவஞ்சி இவள் இதயம் திருடி
குறுஞ்சி மொட்டினுள் மறைப்பேன்

பன்னிரு பருவம் பிறகு பூத்தால்
நம்மிரு மனங்கள் அதிலென உரைப்பேன் !

-Siva

Anwar -Hindi படத்தில் வரும் "maula mera maula merai" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு 

No comments:

Post a Comment