Friday, February 28, 2014

ஆதாரம்

இமை இரண்டும் மூடினால்,
தூக்கம் கண்ணில் வர ஆதாரம்!
மேக கூட்டமது மூடினால்,
மழை மண்ணில் வர ஆதாரம்!
விதை பூமிக்குள் மூடினால்,
விருட்சம் வர ஆதாரம் !
உறவுகள் உன்னை மூடினால் ,
தனிமை வர ஆதாரம் !
நெஞ்சம் அவளை  மூடினால்,
நேசம் வர ஆதாரம் !
நம்-கை பிறர் தோள் மூடினால்,
நட்பு வர ஆதாரம்!
உடை வாளை உரை மூடினால்,
கருணை வர ஆதாரம்!
ஆயுதம் அனைத்தும் மூடினால்,
உலகில் அமைதி வர ஆதாரம்!
வாய்ப்பு கதவுகள் மூடினால் ,
வெற்றி உன் கையில் வர ஆதாரம்!
-Siva

No comments:

Post a Comment