Wednesday, February 19, 2014

தற்கொலை

முற்றத்துல ஒரு கயிறு, உயிர் எடுக்க தொங்குதோ! 
சுற்றத்தார் சுடு சொல்லு, சுருக்குனு தான் குத்துதோ! 
ஏற்றம் உன் வாழ்க்கையில, என்றும் இனி இல்லயென
ஏறி நிற்க்கும் நாற்காளி, ஏளனமாய் சிரிக்குதோ?
மாற்றம் இனி வராதென்று,காற்றும் கதவடச்சி போகுதோ?
குற்றம் என்ன செஞ்சிட்ட,
முடிச்சிப்போட்ட கயித்தால,மூச்சை ஏன் நிறுத்தற? 
சீற்றம் கொண்டு சிதஞ்சிடும் ,
சேர்ந்தவங்க நிலமையை சிந்திக்க ஏன் மறுக்குற?
முற்றும் என்று முடித்திட,வாழ்க்கை ஒன்னும்
முழுநீள நாவல் இல்ல! 
தேற்றம் கொண்டு எழுந்து வா,அந்த தென்றலுடன் 
தேநீர் விருந்து உண்ண! 
-Siva


No comments:

Post a Comment