Tuesday, February 25, 2014

வானுக்கு ஓர் உவமை

அரவம் தீண்டிய வானமோ
ஆனதென்ன நீலமோ,
நேரம் கடந்து போனதால்,
நுரைதப்பியது அந்த மேகமோ!
அழுது தீர்க்கும் மழைத்துளி,அந்த
ஆகாசத்தின் அன்னையோ!

குத்தம் என்ன செஞ்சுதோ அந்த
கண்கூசும் சூரியனு!
மலை ரெண்டு நடுவுல ,
மறஞ்சிருந்து பாக்குதோ,
மறுநாளு தப்பித்து,
மேகத்துக்குள் ஓடுததோ!

கருப்பு நிற புல்வெளியில்,
பூத்திருக்கும்  பனித்துளியோ!
வெள்ளி என்ற பேரு சொல்லி,
தள்ளி நின்னு ஜொலிக்குதோ!
காலை கதிரவன கண்டுப்புட்டா,
காணாமல் தான் போயுடுதோ!

விண்னிலே போனது யார்?அந்த
விஞ்ஞானி  டெஸ்லாவோ,
மின்சாரம ஏதும்  இல்லாம,
மின்மினி பூச்சி கூட்டம் போல ,
மின்னுவது அந்த வட்ட நிலாவோ!.

-சிவா

No comments:

Post a Comment