Thursday, February 27, 2014

கண்ணறியா காதல்

உருவம்தெரியா  தேவதையை ,
உள்ளூர பார்க்கிறேன்
பருவம் நான்கிலும்,
பனி மோதி வேற்க்கிறேன்!

வழிகின்ற  அவள் கண்ணீர, என்
விழிகள் என்றும் பார்த்ததில்ல!
பார்க்காம இருந்தாலும் நெஞ்சம்,
பதை பதைக்க தவறவில்ல!

கருப்பு தான் காட்சி என்றாலும், உன்
கைபிடித்து போகும் போது,அனல்
நெருப்பா நெஞ்சம் எரியுதடி!
பயணம் அது முடிந்தாலும் , உன்
பத்துவிரலை சிறை பிடிக்க,என்
கைரெண்டும் காவல் இருக்குதடி!

ஒளிஞ்சி வெளயாடும் கன்னத்த , என்
ஒதடு கண்டுப்பிடிக்குமடி!
முகத்தில நீ தீட்டும், ஒரு
சிவப்பு ஓவியத்த
கருப்பு திரை போட்டும்,என்
கண்ணுக்கு தெரியுதடி!

நான்கு விழிகள் குருடென்றாலும் ,
நம் காதலுக்கு என்றும் கண்ணிருக்கு,
இடறி என்றும் விழுந்திடாம, அது
இருக்கமா நம்ம பிடிச்சிருக்கு!!

-சிவா

No comments:

Post a Comment