Friday, February 28, 2014

இதயம்

நாலு சுவரு இருக்குது ,
நல்லது கெட்டது தெரியுது!
பாவம் ஒன்ன பாத்துட்டா,
விழி அணை உடையும் முன்னே ,
பதறிபோய் துடிக்குது!
குத்தம் ஒன்ன செஞ்சிட்டா ,
கூனி குருகி நிக்குது!
தலைவி முகத்த பாத்துபுட்டா,
தன்னால தண்டோரா போடுது!
காதல் என்று வந்துட்டா ,
கூடு விட்டு கூடு பாஞ்சி
குதூகலமா இருக்குது !
பிரியமானவ பிரிஞ்சிப்போன,
பாரம் ஏத்தி கணக்குது!
ஈரம் கொஞ்சம் வத்திப்போன ,
இருக்கானு சந்தேகம் எழுப்புது!
ஆடும் ஆட்டம் நின்னுபுட்டா ,
அடக்கமாகி போகுது !
-Siva

No comments:

Post a Comment