Friday, February 14, 2014

காதலர் தினம்!

காவலிருக்கும் கண்ணு ரெண்டும்,
காதல் கைது செய்யாதோ?
சேவல்கொண்டை செவ்விதழ்கள்,
செல்ல சண்டை போடாதோ?
வாசித்த இருத்துளை குழலொன்று,
நாசிகள் என்றாகாதோ!
பழுத்த பழங்கள்  சேர்ந்து,
கழுத்து என்றாகாதோ!
கொழுத்த பஞ்சி மெத்தை,
கொமரி இளநெஞ்சமாகாதோ!
சல்லடை போட்டு தேடியும்,
உன் மெல்லிடை கிடைக்காதோ?
கள்ளப்பார்வை பார்த்தாய், நம்
உள்ளங்கை ரெண்டும் சேராதோ?
கடல் தாண்டி சென்றாலும்,நம்
கால்கள் கவலை கொள்ளாதோ!
கவி எழுதி காதலை சொன்னா,
செவி இரண்டும் கேளாதோ?
புரிந்தும் புரியாததை போல,அது
பாசாங்கு  செய்யாதோ!
பிள்ளை பாத வெட்கம் போதும் ,உன்
பிரியம் புரிய வைக்காதோ!!!
-Siva 

No comments:

Post a Comment