Friday, February 21, 2014

பியானோ ப்ரியம்

கருப்பு ராஜா நானடி,
வெள்ளை ராணி நீயடி!
உன்னருகே நான் இருப்பேன்,
உனக்காக குரல் குடுப்பேன்!
விரல் ஒன்னு உன்ன தீண்டினா
விருட்டுனு நான் எழுவேன்!
சும்மா சும்மா உன்ன தொட்டா,
சுதியேத்தி அழுதுடுவேன்!
கீழும் மேலும் அசஞ்சலும்,
கீதமாக நாம் இசைப்போம்!
குட்ட குட்ட குனிஞ்சாலும் ,
சொட்ட சொட்ட ஸ்வரம் குடுப்போம்!
கிட்டத்தட்ட நாம் பிரிஞ்சாலும்,அந்த
கீபோர்டும் வெறும்கூடோ!
-Siva

No comments:

Post a Comment