Sunday, March 2, 2014

கால் முளைத்த துக்கம்!

பன்னிரெண்ட இரு முள்ளு தொட்டுச்சு, என்
கண்ணிரெண்ட தூக்கம் இன்னும் தொடலயோ!
தீண்டாமை குற்றமென்று, அந்த
தூக்கத்திற்கு தெரியலயோ?

திரை விலகிய தென்றல் அது
தேகத்தை தீண்டியும்,கண்ணில்
நித்திரை என்பது இல்லயோ?
இசை குயிலின் இன்பராகம் அது
செவியினை வருடியும்,விழி
சிறு துயில் கொள்ளலையோ!

நீயில்லாம நான் இருந்துக்குவேனு
நாயகன் போல நடிச்ச மனசு ,
நய்யான்டி பண்ணி இப்போ சிரிக்கிறதோ!
பொட்டியில பூட்டி வச்சி எடுத்து நீ போனது,
துணியோடு என் தூக்கத்தையுமோ!

பக்கதுல உன்னதேடி, பஞ்சுமெத்த உள்ளுக்குள்ள,
பதுங்கிருந்த பொம்மை ஒன்னு,
பொரண்டு நானும் படுக்கையில,
பொறந்த கொழந்த போல,
பொத்துக்கிட்டு அழுகிறதே!

ஒத்த நொடி தாங்காது,
ஒடனே நீயும் வரும்வர,என்
கண்ணு ரெண்டும் தூங்காதது,
கண்ணே என்ன நீ மூடும்வர!

-Siva 

No comments:

Post a Comment