Tuesday, March 18, 2014

தேர்தல்

அஞ்சு வருடத்தில் பூக்கும்
அவசர குருஞ்சி பூவாய்,
அனைத்து மாநிலத்திலும்
தேர்தல் பூ பூத்தாச்சு!

கரை வேட்டி கட்டி மகன்
சக்கர பேச்சு பேசிகிட்டு,
அக்கரை கேட்டு வருகிறான்
வக்கிர புத்திய வச்சிகிட்டு!

வாய்மை வார்த்தைய நம்பிவிட்டு,
கை-மை கொஞ்சம் பூசிக்கிட்டு ,
தலைமை ஏற தேர்ந்தெடுப்பான் ,
வறுமை வாழ்க்கை வாழ்ந்துகிட்டு !

வந்தால் வடியும் வெள்ளமாய் ,
வராமல் மடியும் வறட்சியாய்,
நீர் வந்தாலும் வராவிட்டாலும்
கண்ணீர் என்றும் கரைவதில்ல !

கையூட்ட வாங்கிக்கிட்டு,
பொய்  ஓட்ட போட்டுவிட்டு,
கைமேல் வந்த வெற்றியெல்லாம் ,
மெய் தேர்தல் வெற்றியில்ல!

-Siva 

No comments:

Post a Comment