Monday, March 17, 2014

பந்தைய குதிரை

எந்தையும் தாயும் இருக்கி பிடித்து
பந்தையம் கட்டிய குதிரைகளாய்,
பந்த பாசம் பக்கம் திரும்பாமல்
பகட்டு கடிவாளம் கட்டிகிட்டு ,
லயித்து விளையாடும் நேரத்தில்,
லட்சியம் என்ற லாடம் அடித்து ,
பதுக்கி வைத்த திறமைகள் மறந்து
ஒதுக்கி வைத்த ஒரு கோட்டின்  மேல் ,
ஓடி கொண்டே இருக்கிறோம் நுரைதல்ல  !
எல்லை கோடு தாண்டி போயும்,
எங்கள் ஓட்டம் ஓயவில்ல  !
உலக்கையில கனவை குத்தி ,உரலுல
உமியெடுக்கும் பெற்றோர என்ன சொல்ல !

-Siva

No comments:

Post a Comment