Tuesday, March 25, 2014

தேரிக்காட்டு தேசம்

ஏலே ஏலே எங்கல்லே,
எள்ளுவிளை தேரிக்குள்ள
ஏறி போவோம் வாங்கலே!
ஒட முள்ளு குத்தும்,ஓரமா ஒதுங்கி போங்கலே!

பன ஒல வீடுக எங்கல்லே ?
பங்கலாவா போச்சு பாருங்கலே!
பாம்படம்  போட்ட  பாட்டி  எங்கல்லே?
பாக்கிடிக்கும் அவ சத்தம் கேக்கல ?
பைனி விக்கும் பயவுள்ளைங்க எங்கல்லே?
தேனி பக்கம் பொழபத்து போய்ட்டாங்கலே!
திருவிழா ஆளுக எங்கல்லே ,
தேடியும் ஒருவயலையும் காங்கல!
கோயில் கொடயெல்லாம்,
கொட சாஞ்சி நிக்குதில்லே!

களவாண்டு தின்ன கொள்ளாங் கொட்டைய,
காலுக்கடியில பாக்கையில,
பல்லாண்டு  பிரிஞ்ச வலி நோவுதிலே !
கருப்பட்டி காய்ச்சி காத்துல வரும் வாசம்,
காணாமபோய் பத்தாண்டு ஆகுதிலே!

பெப்சி கோலா குடுக்கும் அண்ணாச்சி ,
காளிமார்க் கலரெல்லாம் என்னாச்சி?
உலகமயம் என்ற பேர சொல்லி,
எங்க ஊரும் இன்று மாயமாச்சி!

-Siva

No comments:

Post a Comment