Monday, March 24, 2014

I.T அவலம்

வட்ட நிலவிலும் சிறு கரை இருக்கு,உங்க
சட்டையில ஒரு கரை இருக்கா?
எட்டி நிக்கும் வானுக்கும் வேர்த்துக்கொட்டும்,
இந்த I.T ஆளுக்கு வேர்த்திடுமா ?
எத்தனை  எத்தனை கேள்வியடா ,
எல்லாத்துக்கும் பதிலுன்டு கேளுங்கடா!

பத்தும் செய்யும் பணம்னு சொன்னீங்க,
E.M.l அடைக்க அதனால் முடியலையே?
அஞ்சிநாள் தான் வேலைனு பொறாமைபட்டீங்க,
கெஞ்சினாலும் ஊருக்கு விடுப்பு கிடைக்கலையே?
அழகிய அலைபேசிய எங்க கையில பாத்தீங்க,
அழுகின்ற எங்கள் குரல அதில  கேட்டீங்களா?

நாகரீக உடைபோட்டு, பூனை
நடைபோடும் கணினி பெண்ணை ,
நையாண்டி பண்ணி சிரிச்சீங்க!
பெத்த புள்ளைய பத்து நாளுக்குள்ள,
பிரஞ்சு  வாடும் அவள் விழிகள,
ஒத்த நொடி பாத்தீங்களா?

உறவெல்லாம் எங்களுக்கு கனவாச்சி,
இரவெல்லாம் எங்களுக்கு பகலாச்சி,
ஈட்டிய செல்வமெல்லாம் E.M.lக் என்றாச்சி,
எட்டு வருஷ எங்க நல்ல காலம் ,
ஒம்போது பதினொன்னோட(9/11) போயாச்சி !

-Siva

No comments:

Post a Comment