உற்றவளின் நெற்றியிலே குங்குமம்,
பொற்றாமரை குளமின்னும்
ஒற்றை நிலவானதென்ன!
சிற்றிதழின் பற்றதனை விட்டிடவே,
உற்றவனின் சிந்தையெல்லாம்
வெற்றிடமாய் போனதென்ன!
நற்றவளின் சொற்றொடரும் நாவிலே,
கற்றவரின் கர்வமெல்லாம்
குற்றுயிராய் ஆனதென்ன!
சற்றவளின் பிற்றிடையின் அசைவிலே,
சுற்றலுக்கோர் முற்றுதலை
செம்பூமி வைத்ததென்ன!
கற்றாழை முற்றோடு வருப்பினி,
கொற்றவளின் கையிரண்டும்
தொட்டழியும் வேகமென்ன!
எற்றேனும் சிற்றாராய் சினுங்கினால் ,
உற்றவளே பெற்றவள்ப்போல்
உருமாறும் மாயமென்ன!!!!
-Siva
No comments:
Post a Comment