Thursday, January 22, 2015

ஜாவா கன்னி

ஜாவா கன்னியடி,
நீ ஜாவா கன்னியடி,
உன் கண்கள் எனை சாய்க்கும் 
நோவா கன்னிவெடி!
போவா இரவுகளில்
உன்னை எண்ணியடி,
பூவா என் இதயம் பின்னுதடி!
சாவா வலிகளில் காயமுற்றேன் ,
நீ-வா இன்றே என் மருந்தாகடி!
யாரும் நெருங்கா தீவா, (private)
என் காதல் என்னுள் இருந்ததடி!
ஊரும் அறியும் விதமா,(public)
உன் பெயரை உதடுகள் சொல்லுதடி!
உனை பார்க்கும் போது மட்டும்,
காற்றிலே வார்த்தை கறையுதடி(volatile)
காதலை கடத்தல் பொருள்போல, என்
கண் இமை கூட பதுக்குதடி! (protected)
முயற்சி திருவினை ஆகும் என்பார்,
முயன்றேன் பிரிவினை ஆக்கினாயடி !(try)
நடைவண்டி பழகும் பிள்ளைபோல்,
முதல் காதலை உன்னிடம் சொன்னேன்,
கண்ணாடி பிம்பம் போல் காதலை ,
கண்முன் காட்டுவாய் என பார்த்தால்.(catch)
காற்றாடி(fan) முன் காகிதம் போல, (throws )
கடைசியில் குப்பையில் வீசினாயடி! (gc)
மறதி ஆளும் முதுமையிலும்,
இறுதியா நீ பேசிய வார்த்தை, (final)
உறுதியா உள்ளத்தில் இருக்குமடி!
உறைந்து போன அந்த நொடிகளை,(static)
திறந்து பார்க்க நினைத்தால், உயிர்
இறந்தாலும் மீண்டும் இறக்குமடி!!!
-Siva

No comments:

Post a Comment