Thursday, January 22, 2015

பொங்கல் வாழ்த்து

மஞ்சள் வெயிலொளி, 
மண்ணில் சேராதோ!
கொஞ்சும் குயிலொலி,
காதினில் கேளாதோ!
பஞ்சை பதுக்கிய மேககூட்டம்,
மிஞ்சும் மழையென தூவாதோ!
புஞ்சை புழுதியாய் போன நெஞ்சம்,
நஞ்சை நிலமென மாறாதோ!
எஞ்சிய எங்கள் துயர் துடைக்க,
இந்த பொங்கல் இன்று பொங்காதோ! 


-Siva

No comments:

Post a Comment