Monday, February 23, 2015

காதல் இளங்குருவி

காதல் இளங்குருவி,
உசுரை மட்டும் உருவி,
நெஞ்சாங்கூடு விட்டு, 
நெடுந்தூரம் பறந்தாலே!
கண்ணில் காட்டருவி ,
அவள் விட்டு சென்ற
ஞாபக சிறகு,
கூர்வாளாய் மருவி
குத்தும் என மறந்தாலே!
துருவ பனிமலை போல, (global warming)
சில்லென காதல் இருந்ததடி,
நீ விட்டு சென்ற வெப்பமயம்,
மலையும் ஆறாய் உருகுதடி,
கண்ணீரின் கடல்மட்டம்,
கணக்கு வழக்கில்லாமல் ஏறுதடி !
ஒரு நெகிழி போல் காதல், (plastic)
நொறுங்காமல் என்னுள் இருந்ததடி ,
அதை நெருங்காமல்
நீயும் சென்றதால்,
அகழியில் இறந்து புதைந்ததடி!
மண்ணுக்குள் விழுந்தாலும்
என் காதல்,
மக்காமல் என்றும் இருக்குமடி!
ஒண்ணுக்குள் ஒன்றாய்
நாம் ஆகும் வரை,
மறக்காமல்
மறுஜென்மம் எடுக்குமடி!
-Siva

No comments:

Post a Comment