Tuesday, January 28, 2014

வாழ்க்கை-பாலம்

போக்குவரத்து நெரிசலில, போகுறது சுலபமில்ல,
ஏழையென்றும் பணக்காரனென்றும் பாகுபாடுமில்ல,
ஏறி சென்றவனுக்கெல்லாம்,ஏற்றம் என்று எதுவுமில்ல!
வளைகிற போது வளைஞ்சா, விபத்தென்று விதியுமில்ல!
எத்தன பாரம் சுமந்தாலும்,எனக்கொன்றும் கவலையில்ல! 
முழுமை பெறாம நானிருந்தா,முள்ளுகம்பி நீட்டுமில்ல!
உடஞ்சு போய் நானின்னா,உனக்கென்றும் நேர்வழியில்ல!
ஏறியவன் இறங்குவதையும், இறங்கியவன் ஏறுவதையு
ம்,
எட்டிநின்னு பாக்குறது எனக்கொன்னும் புதுசுமில்ல!
என்னடியில நிழழிருந்தும், எளப்பார எவனுக்கும் நேரமில்ல!
என்னப்போல வாழ்க்கையிருந்தும், எனக்கொரு வாழ்க்கையில்ல!
-Siva

2 comments: