Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்து

ஆறு செங்கல அடுக்கி வச்சி,
அரச்ச சந்தனத்த அதில் பூசி,
அடுப்பாக அதை அனல் மூட்டி,
ஆழாக்கு அரிசியும், அச்சு வெல்லம் போட்டு, 
ஆக்கி வச்ச பொங்கல் இன்று பொங்குதே! 
ஆத்தூர் குயவனின் மண்பானையும்,
அறுத்துவச்ச செங்கரும்பும் இன்று 
அன்னமிட்ட உழவனுக்கு நன்றி சொல்ல  !
அகர வரிசை கவிதையொன்று ,எனக்காக
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து பொழியுதே! 
-Siva 

No comments:

Post a Comment