Thursday, December 26, 2013

அம்மா!!!!!!!!!!

எல்லை சாமி அருளாக,காரிருள் நிலவாக 
எம்புள்ளையா பொறந்தாயினு பூரிச்சீங்க! 
எத்தனை மணிக்கு என்வாயிறு பசிக்குமுன்னு
எனக்கே தெரியாமா கண்டுபிடிச்சீங்க!
எதேர்ச்சயாய் என் கால்கள் எடரி விழுந்தா
எறகிழந்த பறவையாத் துடிச்சீங்க!
எட்டாவது படிக்கையிலே, எதையோ போட்டு உடைக்கையிலே
எம்மகன் விஞ்ஞானினு சொன்னீங்க!
எவர் மேலோ உள்ள கோபத்த, எரிமலையா காட்ட 
எதிர்த்து பேசாம என் ஏசலையும் ரசிச்சீங்க! 
எதிர்வீட்டு பந்தியில,எலையில வச்ச பலகாரத்த
எனக்காக முந்தியில மறச்சீங்க!
எந்திரிக்க முடியாம, காச்சலுல நான் படுத்தா
என்னருகே செவிலியா இருந்தீங்க ! 
என்னத்த சொல்ல அந்த எமப்பய வந்து நின்னா
எங்கம்மா பாசக்கயிறு எனக்குதான்னு எடுத்துரைப்பேங்க!
எழவெடுத்தவன் கேட்க்க மறுத்தா
எட்டி நானும் உதைப்பேனுங்க!

-Siva

No comments:

Post a Comment