Tuesday, December 17, 2013

மெட்டுக்கு பாட்டு -3

காதலே,உயிர் காதலே
என்னுள்ளே வீசினாய்,X-கதிராய்(X-RAY)
காதலே,உயிர் காதலே
எலும்பை மட்டும் விட்டு,
எங்கோ போனதென்ன ?

மனசுக்குள்  தயக்கம் , நில நடுக்கம்
மெழுகாய் அது உருகுதா?
கண் விழித்து பார்த்தா,அவ சிரிச்சா
காற்றில் வாசம் வீசுதா?
அவள் இதழ்கள், இச் என்றால்
ஆஹா அது சொர்கம்!
அசைவற்று,அவை இருந்தால்
ஐயோ அது நரகம்!
அவள் கண்கள், பென்டுலமா
அவை ஆசையும் பொழுது விடியும் என் பொழுது!
வஞ்சி கூந்தல்,வள்ளுவன் வரிகளா
இரண்டடியிலும் இதயம் திருடி போகுதே!

காதலின் நினைவுகளால்....
காகித மலருக்குள்ளும் தேனா ?
கையில் அள்ளி எடுக்க காயமா?
சரியா இது சரியா?
நினைவுக்குள் நெறுஞ்சி சரியா ?

கை கோர்த்து செல்லும் போது
காதருகே  காற்று சொன்னதென்ன ?
உந்தன் தோளில் சாய , உன் மடியிலே தூங்க
ஏங்கினேன் கண்கள் வீங்கினேன்!
உன்னால் இரு ஜென்மம் வாங்கினேன் !

-Siva

No comments:

Post a Comment