Tuesday, April 19, 2016

நாம்

விதி வீசிச்சென்ற தென்றலில்,
எங்கிருந்தோ பறந்து வந்து
ஒன்று சேர்ந்த காகிதங்கள் நாம்!
எழுதுகோல் ஏதும் இல்லாமல் ,
காதல் கவிதை ஒன்றை
இதயத்தில் எழுதிய கவிஞர்கள் நாம்!
ஓர் ஆத்திரங்கள் ,பல ஆனந்தங்கள்
சுழற்ச்சி முறையிலே காணும்
பல்லாளுமை கோளாறுகள் நாம்!
(Multiple personality disorder)
தேசம் விட்டு தேசம் வந்தும் ,
தேகம் விட்டு நேசம் நீங்கா
வித்தை அறிந்த வித்தகர்கள் நாம்!
அன்றில் பறவைகள் அன்றோடு
காதல் கிளிகள் இன்றோடு ,
என்றும் மெய்காதலின் காதலர்கள் நாம் !!!
-Siva

No comments:

Post a Comment