Monday, October 28, 2013

பஞ்சு நெஞ்சில் பிரிவுத் தீ..

வெள்ளை தொட்டில் ஒன்னு, வெறுமனே ஆடுதே
பிள்ளை நிலா எங்கேனு,பிரிவாலே பாடுதே!
ரெண்டு பல் அழகிய தேடி,
உண்டுக் கழியாம வண்டுகள் வாடுதே!
மகிழ்விக்கும் பொம்மைகள் எல்லாம்,
மௌன விரதம் இருக்குதே!
ஈரம் பட ஏங்கும் போர்வை யொன்று ,
ஓரமாக சுருண்டு கெடக்க!
பேச்சு சத்தம் கேக்காம,
பூச்சுகள் ரீங்காரம் பண்ண!
என்னோட நிலயை யாரிடம் சொல்ல
இடப்பக்க இதயத்த,நீ எடுத்து செல்ல!
இசை கேட்டாலும் இமை மூடாம
திசை நான்கிலும் பாதம் திரிய,
பஞ்சு நெஞ்சில் பிரிவு தீ எறிய,
அனைக்க நீ வருவாயா இல்லை,
நினைக்க தான் விடுவாயா அன்பு மகளே!

-Siva

No comments:

Post a Comment