Tuesday, October 1, 2013

வெண்குருதி பாயட்டும் .

காதலுக்கு கண்ணில்லை என்றால்,நம்
காலம் முழுக்க குருடராய் இருப்போம்!
அமைதியின் குறியீடு வெள்ளை என்றால்,நம்
அங்கமெல்லாம் வெண்குருதி பாயட்டும் !
தூங்கி கொண்டிருப்பது தர்மம் என்றால்,அதை
ஓங்கி மிதித்து நாமும் எழுப்புவோம்!
சட்டம் ஒரு இருட்டறை என்றால்,அதன்
விட்டதில் விளக்கேற்றி ஒளிகூட்டுவோம்!
கண்ணுக்கு தெரியாதவன் கடவுள் என்றால்,அவனை
கண்டுபிடிக்க காலம் கழிக்க மாட்டோம்!
அர்த்தமற்றது மனிதநேயம் என்றால்,நம்
அகராதியில் அதனை அளகிட்டு காட்டுவோம் !
-Siva

No comments:

Post a Comment