Sunday, August 4, 2013

நண்பர்கள் தினம்

ஆரஞ்சு மிட்டாயை நீ கடித்து 
ஆறு அஞ்சு வயசுல எனக்கொடுத்து 
ஆரமிச்சி வச்ச நம் நட்பு 
ஆறாக பாயுதே அன போடாம!

ஆராஞ்சி பாத்துட்டேன் ,
ஆர அமர யோசிச்சிட்டேன் ,
ஆரா துயரம் ஏது அருகில் நீயிருந்த காலத்திலே?
ஆனாலும் விடை கிடைக்கலியே 
ஆருயிர் நண்பனே ஓஞ்சி நானும் தோத்துட்டேன் !

அறிவியல் பாடம் படிக்காமல்
ஆழியில் குளித்த அலைகள் எங்கே ?
ஆறிப்போன தேநீர் குடித்து
அரட்டையடித்த நாட்கள் எங்கே ?
அறங்கம் அதிர சினிமாவில்
ஆர்பரித்த குரல்கள் எங்கே ?


அறுவது வயது ஆனாலும்
ஆரோக்கியமாய் தோன்றும் அந்த
அருமையான நினைவுகளை மீட்டுத்தா
அன்பு நண்பனே!

-Siva 


No comments:

Post a Comment