வளர்ந்த மண்ணையும்
வேராக ஒரு மரம் பிடிச்சிருக்க,
வளர்த்த எங்கள
வேறாக ஏன் நீ பாக்குற?
மத்தவங்களுக்கு விருந்து வச்சி மன
மகிழ்ச்சி கொள்ற,உன்
பெத்தவங்கள பட்டினி போட்டு
உசிரோட ஏன் கொல்ற?
பூச்செடியை கூட நட்டு வைக்க ,
பணத்த தண்ணியா செலவழிப்ப!
நோய்-நொடினு நாங்க வந்தா,
ஒரு பிணத்தை போல அளைகழிப்ப !
வீணா செலவழிச்சி ,விளையாட்டு பள்ளியில
உம் புள்ளைங்கள சேத்துடிவ !
தானா கேட்டுப்பாத்தும்,தரிசிக்க விடமாட்ட,
எங்க பேரன் பேத்திய !
பழம் பொருளயெல்லாம் ,ஆன்டீக்னு சொல்லி ,
அலமாரியில் அடுக்கி வைப்ப !இந்த
கிழம் பொருளை,கிட்டத்துல சேக்காம
ஆசிரமத்துல ஒதுக்கி வைப்ப !
உருவிலே பழுத்ததும்,
கருவில் பிறக்கா பிள்ளை போல ,
கண்ணுக்குள் வச்சு நீ
காப்பாத்துவேனு நெனச்சா,
தெருவிலே நீ விட்டபோது, தெரிஞ்சிதே
அனாதை வார்த்தைக்கு அர்த்தம் ,
அகராதி ஏதும் இல்லாம !
உதிரம் குடுத்து ஊட்டி விட்டோம் ,இந்த
உலகத்தை விட்டு போன பின்னே ,
சதுர வடிவ போட்டாவ ,
மாலை போட்டு மாட்டி வைப்ப !
சந்தோஷமா உன் கூட இருப்போம்,
உன் வீட்டு சுவத்துல!
-Siva
No comments:
Post a Comment