கன்னி வடிவமா கவிதைய
கண்டாயடா கவிஞ்ஞா ,
எண்ணி நானும் பாக்குறேன்
ஏன்னு கேள்வி கேக்குறேன் !
தலையில் சூடிய பூக்கள்
தலைப்பு என்றானதோ?
துருத்தி நிற்கும் புருவங்கள்
விருத்தம் என்றானதோ?
ஆங்காங்கே வரும் ஆச்சரியக்குறி,
மூச்சிறைக்கும் நாசியோ?
எதுகை மோனை என்பதெல்லாம் ,
முதுகை போன்றதோ?
பெண்பாதம் நடந்த ஈரடி,
வெண்பா என்றானதோ?
சீரடியில் அசையும் இடை தான்
சீர்,அடி,அசை என்றானதோ?
கன்னிதான் கவிதை என்று
கண்ணி வைத்து காத்திருந்தா ,
கண்தொடாமல் என்னை வஞ்சிப்பா-லோ!
கைய்யுள் படர்ந்த ரேகைப்போல,அனைத்து
செய்யுளில் அடக்கம் இந்த பெண்பாலோ!
-சிவா
கண்டாயடா கவிஞ்ஞா ,
எண்ணி நானும் பாக்குறேன்
ஏன்னு கேள்வி கேக்குறேன் !
தலையில் சூடிய பூக்கள்
தலைப்பு என்றானதோ?
துருத்தி நிற்கும் புருவங்கள்
விருத்தம் என்றானதோ?
ஆங்காங்கே வரும் ஆச்சரியக்குறி,
மூச்சிறைக்கும் நாசியோ?
எதுகை மோனை என்பதெல்லாம் ,
முதுகை போன்றதோ?
பெண்பாதம் நடந்த ஈரடி,
வெண்பா என்றானதோ?
சீரடியில் அசையும் இடை தான்
சீர்,அடி,அசை என்றானதோ?
கன்னிதான் கவிதை என்று
கண்ணி வைத்து காத்திருந்தா ,
கண்தொடாமல் என்னை வஞ்சிப்பா-லோ!
கைய்யுள் படர்ந்த ரேகைப்போல,அனைத்து
செய்யுளில் அடக்கம் இந்த பெண்பாலோ!
-சிவா
No comments:
Post a Comment