நீரில் நனைத்த பஞ்சு போல
கண்ணீரில் நனைத்து
நெஞ்சம் கணப்பதென்ன!
வேரில் விட்ட வெந்நீராய் இந்த
வஞ்சிக்கொடி வாடியதென்ன!
தேகம் தோன்றியது தேமலென்று
தோழிக்குறைத்தேன்,பொய்யுடைத்து
பாழும் பசலை படர்ந்ததென்ன!
கிழக்கே அவன் சென்றானோ,உயிர்
வடக்கிருந்து வதைப்பதென்ன!
புன்னகை பூவை இதழ் தொடா,
பொன்னகை பட்டுடல் தொடா,
பருக்கை சோறு பவளவாய் புகா,
உள்ளெலும்பு உலகம் நோக்க,
துரும்பென இளைத்து துடித்தேன்,
காந்தம் போல் கவர வாரானோ !
வானை தழுவும் முகிலை போல்
வீனாக என்னவா போகுமோ!
மானை தோய்த் தம்பை போல்
மனம் மதியிழந்து சாகுமோ !
-Siva
கண்ணீரில் நனைத்து
நெஞ்சம் கணப்பதென்ன!
வேரில் விட்ட வெந்நீராய் இந்த
வஞ்சிக்கொடி வாடியதென்ன!
தேகம் தோன்றியது தேமலென்று
தோழிக்குறைத்தேன்,பொய்யுடைத்து
பாழும் பசலை படர்ந்ததென்ன!
கிழக்கே அவன் சென்றானோ,உயிர்
வடக்கிருந்து வதைப்பதென்ன!
புன்னகை பூவை இதழ் தொடா,
பொன்னகை பட்டுடல் தொடா,
பருக்கை சோறு பவளவாய் புகா,
உள்ளெலும்பு உலகம் நோக்க,
துரும்பென இளைத்து துடித்தேன்,
காந்தம் போல் கவர வாரானோ !
வானை தழுவும் முகிலை போல்
வீனாக என்னவா போகுமோ!
மானை தோய்த் தம்பை போல்
மனம் மதியிழந்து சாகுமோ !
-Siva
No comments:
Post a Comment